Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்
    மாநிலம்

    “இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 காவலர்களைக் கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இச்சம்பவம் ஆறாத் துயரம்.

    காவல் துறை விசாரணையில் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது ஆறுதலைத் தருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அவரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.

    முதல் தகவல் அறிக்கை பதியாத ஒரு வழக்கில் போலீஸார் விசாரணையே செய்யக் கூடாது என்பதுதான் சட்டம். இந்த விசாரணையை நடத்தியது அத்துமீறல். காவல் துறையினர் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள் போல் செயல்படுகின்றனர் என்று உச்ச நீதிமன்றமே விமர்சித்துள்ளது. அந்த அளவுக்கு போலீஸாரின் அதிகார, ஆணவம் அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது. விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகளை போலீஸார் பின்பற்றுவதில்லை.

    அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள்ளே சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அஜித்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கைதானவர்களை ஜாமீனில் வெளியே விடாமல், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குற்றம் செய்தோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். கைதானவர்களை பிணையில் வெளியே விடாமல் விசாரிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

    #சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் #அஜித்குமார் என்னும் இளைஞர் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலால் படுகொலையாகியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

    தம்பி அஜித்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து… pic.twitter.com/HLhWEu0cE4


    — Thol. Thirumavalavan (@thirumaofficial) July 2, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு

    July 5, 2025
    மாநிலம்

    கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

    July 5, 2025
    மாநிலம்

    திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி வழங்குவதா? – பழனிசாமி குற்றச்சாட்டு

    July 5, 2025
    மாநிலம்

    மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    July 5, 2025
    மாநிலம்

    திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

    July 5, 2025
    மாநிலம்

    ‘பரந்தூர் மக்களுடன் நானே உங்களை நேரில் சந்திக்கும் சூழல் உருவாகும்’ – முதல்வருக்கு விஜய் கடிதம்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு
    • கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்
    • திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி வழங்குவதா? – பழனிசாமி குற்றச்சாட்டு
    • மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
    • திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.