Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்
    மாநிலம்

    இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்

    adminBy adminMay 14, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.

    சு​மார் 75 வருடங்​களுக்கு முன்​பு, மருத்​து​வர் மகாலிங்​கம் என்​பவர் கும்​பகோணம் நகர காங்​கிரஸ் கமிட்​டிக்கு அலு​வல​கம் கட்​டு​வதற்​கான முயற்​சி​யில் இறங்​கி​னார். இதற்​கான நிதி​யைத் திரட்​டு​வதற்​காக பொருட்​காட்சி நடத்​தி​ய​வர், அதில் சேர்ந்த நிதி​யைக் கொண்டு 1950-ல் கும்​பகோணம் சாரங்​க​பாணி கோயில் சன்​னிதி தெரு​வில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்​கி​னார். அத்​தோடு அந்த முயற்சி கிடப்​பில் போன​தால், கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக வாங்​கப்​பட்ட இடமானது ஆக்​கிரமிப்​புக்கு உள்​ளானது. ஒரு​கட்​டத்​தில், காங்​கிரஸார் பெரு​முயற்சி எடுத்து ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி அந்த இடத்தை மீட்​டனர்.

    இதையடுத்​து, மீண்​டும் கட்சி அலு​வல​கம் கட்​டும் முயற்​சி​யில் இறங்​கிய கும்​பகோணம் காங்​கிரஸார், 2022 ஏப்​ரல் 24-ல் அப்​போதைய மாநில தலை​வர் கே.எஸ்​.அழ​கிரி, கே.வீ.தங்​க​பாலு உள்​ளிட்​டோரை அழைத்து வந்து கட்சி அலு​வல​கம் கட்ட அடிக்​கல் நாட்​டினர். இது நடந்து மூன்​றாண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யில், கட்​டிடம் கட்​டு​வதற்​கான எந்த முகாந்​திர​மும் தெரிய​வில்​லை. அடிக்​கல் நாட்​டிய போது வைத்த கல்​வெட்​டும் கேட்​பாரற்று மூலைக்​குப் போய்​விட்​டது. இதனிடையே, கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக சிலர் வசூல்​வேட்டை நடத்தி வளமான​தாக​வும் சர்ச்சை வெடித்து அடங்​கியது.

    இந்த நிலை​யில், கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக வாங்​கப்​பட்ட இடத்தை டெல்லி காங்​கிரஸ் தலைமை கையகப்​படுத்தி உடனடி​யாக அந்த இடத்​தில் கட்சி அலு​வல​கத்​தைக் கட்​டி​முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கும்​பகோணம் காங்​கிரஸ் மாமன்ற உறுப்​பினர் ஐயப்​பன் சோனி​யா, ராகுல் உள்​ளிட்​டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்​கி​றார்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஐயப்பன், “கும்​பகோணம் ஒரு காலத்​தில் காங்​கிரஸ் கோட்​டை​யாக இருந்​தது. பிற்​பாடு பல்​வேறு காரணங்​களால் காங்​கிரஸ் இங்கு கொஞ்​சம் கொஞ்​ச​மாக தேய்ந்​து​விட்​டது. எஞ்சி இருக்​கும் எங்​களைப் போன்ற சில​ரால் இன்​ன​மும் இந்​தப் பகு​தி​யில் காங்​கிரஸ் உயிர்ப்​போடு இருக்​கிறது.

    கட்சி அலு​வல​கம் கட்ட அடிக்​கல் நாட்​டப்​பட்ட நாளி​லேயே நன்​கொடை வசூலிக்​கப்​பட்டு அதைக் கொண்டு அந்த இடத்​தில் தற்​காலிக ஷெட் அமைக்​கப்​பட்​டது. ஆனால், அதைத் தவிர வேறெந்த வேலை​யும் அதன் பிறகு நடக்​க​வில்​லை. மீண்​டும் அந்த இடம் தனி​யார் ஆக்​கிரமிப்​புக்​குள் போய்​விடக் கூடாது என்​ப​தற்​காகவே அந்த இடத்தை கைப்​பற்றி கட்சி அலு​வல​கத்​தைக் கட்ட உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சோனி​யா, ராகுல், கார்கே உள்​ளிட்​டோருக்கு கடந்த 21-ம் தேதி மனு அனுப்​பினேன்.

    அத்​துடன் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, கே.வீ.தங்​க​பாலு மற்​றும் மேலிட பார்​வை​யாளர்​கள் கிரிஷ் சோடங்​கர், சூரத் ஹெக்டே ஆகி​யோரைச் சந்​தித்து அவர்​களிட​மும் இது தொடர்​பாக மனு அளித்​தேன். அவர்​களும் இது தொடர்​பாக உடனடி​யாக நடவடிக்கை எடுப்​ப​தாகச் சொல்லி இருக்​கி​றார்​கள். சொன்​னபடி அவர்​கள் இந்த விஷ​யத்​தில் உரிய நடவடிக்​கையை உடனே எடுத்​தால் தான் கும்​பகோணத்​தில் காங்​கிரஸ் கட்​சிக்கு புத்​து​யிரூட்ட முடி​யும். இல்​லா​விட்​டால் கட்​சி​யின் நிலைமை இன்​ன​மும் மோச​மாகி​விடும்” என்​றார்.

    ஐயப்பன்

    கட்சி அலு​வல​கத்தை கட்​டி​முடிப்​ப​தில் என்ன பிரச்​சினை என கும்​பகோணம் மாநகர காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் மிர்சாவூதீனிடம் கேட்​டதற்​கு, “காங்​கிரஸ் கட்சி நிர்​வாகி​களுக்​குள் ஏற்​பட்ட குழப்​பத்​தின் காரண​மாகவே கட்சி அலு​வல​கம் கட்​டப்​ப​டா​மல் கிடக்​கிறது. விரை​வில் மாநகர நிர்​வாகி​களை அழைத்​துப் பேசி கட்சி அலு​வல​கத்தை கட்டி முடிப்​போம்” என்​றார்.

    தஞ்சை வடக்கு மாவட்ட காங்​கிரஸ் கட்சி தலை​வர் டி.ஆர்​.லோக​நாதனோ, “அந்த இடத்​தில் கட்சி அலு​வல​கம் கட்ட 33 ஆண்​டு​களுக்கு முன்பே ஜி.கே.மூப்​ப​னார் அடிக்​கல் நாட்​டி​னார். அப்​போதும் கட்​டிடம் கட்​டப்​பட​வில்​லை. அடுத்​த​தாக 2022-ல் மீண்​டும் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. ஆனால், கட்​டிடம் கட்​டு​வதற்​கான நிதியை யாரும் தரவில்​லை. அதனால் தேக்​கம் ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

    இன்​றைக்கு அரசி​யலுக்கு வந்​தவர்​கள் எல்​லாம், “நாளைய முதல்​வர் நாங்​கள் தான்” என மார்​தட்​டு​கி​றார்​கள். ஆனால் ஒரு காலத்​தில் தமி​ழ​கத்​தையே ஆண்ட காங்​கிரஸ், கட்​சிக்கு அலு​வல​கம் கட்​டு​வதற்கு திரும்​பத் திரும்ப அடிக்​கல்லை மட்​டுமே நட்​டுக் கொண்​டிருக்​கிறது. அதனால் தான் கூட்​டணி ஆட்சி என்று சொல்​வதற்​குக் கூட இப்​போது கூச்​சப்​பட்டு நிற்​கிறது காங்​கிரஸ்​!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    மாநிலம்

    மதுரை அமமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணையும் நிர்வாகிகள்!

    July 3, 2025
    மாநிலம்

    டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!
    • பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்
    • காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • ஆப்டிகல் மாயை- இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் மறைக்கப்பட்ட பலங்களை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பள்ளிக்கல்வித் துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்: பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.