Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, October 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்
    மாநிலம்

    ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

    இதுகுறித்து திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், நாடாளு​மன்ற குழுத் தலை​வரு​மான கனி​மொழி சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவத்​தில் 41 பேர் இறந்​ததுடன், தற்​போதும் பலர் உயிருக்கு போராடி வரு​கின்​றனர். இந்த விவ​காரத்​தில் அரசி​யல் மனமாச்​சா​ரி​யங்​களைத் தாண்டி முதல்​வர் ஸ்டா​லின் உடனே கரூர் சென்​று, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​ததுடன் நிவாரண​மும் வழங்​கச் செய்​தார்.

    பாதிக்​கப்​பட்ட மக்​களு​டன் நின்​றது திமுக​வும், தமிழக அரசும் தான். இந்த சம்​பவத்​தில் யார் மீது தவறு இருக்​கிறது என்​பது விசா​ரணை​யில் நிச்​ச​யம் தெரிய​வரும். ஆனால், கரூரில் இத்​தனை பிரச்​சினை நடந்​ததற்கு பிறகும், ஒரு கட்​சி​யின் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் அங்​கிருந்து புறப்​பட்​டதும், தன் பாது​காப்பை மட்​டும் நினைத்​ததும் இது​வரை நான் பார்த்​தி​ராத ஒன்​று. அவரால் முடிய​வில்லை என்​றால் கூட அடுத்​தகட்ட தலை​வர்​கள் மக்​களு​டன் நின்​றிருக்க வேண்​டும்.

    திமுக உள்​ளிட்ட பிற கட்​சிகளைச் சேர்ந்த 2-ம்​கட்ட தலை​வர்​கள் மக்​களு​டன் நிற்​கிறார்​கள். அடுத்​தகட்ட தலை​வர்​களோ, மாவட்ட நிர்​வாகி​களோ கூட மக்​களை வந்து சந்​திக்​காமல், உதவி​களைச் செய்​யா​திருப்​பது மனி​தாபி​மானமற்ற செயல். மக்​களைப் பற்​றி​யும், அவர்​களின் பாது​காப்பை பற்​றி​யும் தான் நினைக்க வேண்​டுமே தவிர, வன்​முறையை தூண்​டு​வது போல் பேசுவது நிச்​சய​மாக உச்​சகட்ட பொறுப்​பின்​மை​யாகும்.

    ஒரு பிரச்​சினையை அமை​தி​யாக்​கு​வது தான் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் அழகு. வன்​முறையை தூண்​டும் பேச்​சுகளை தவிர்க்க வேண்​டும். அப்​படி செய்​பவர்​களாக இருந்​தால், அவர்​கள் அரசி​யல் ஆதா​யம் தேடு​கிறார்​கள் என்றே கருத வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    இதே​போல் ஆ.ராசா கூறிய​தாவது: எப்​போது மக்​களுக்கு தேவை வரு​கிறதோ, அப்​போது எங்​கள் உயிரை​யும் பணை​யம் வைத்து களத்​திலே போய் நிற்​பது​தான் திமுக வரலாறு. கரோனா காலக்​கட்​டம் தொடங்கி பல்​வேறு சம்​பவங்​களை உதா​ரண​மாக கூறலாம். அது​போல​வே, இப்​போதும் எங்​கள் முதல்​வரும் செய்​திருக்​கிறார். இதிலே அரசி​யல் கிடை​யாது. ஆனால், இப்​படி களத்​திலே நிற்க வேண்​டிய அந்த கட்​சி​யின் தலை​வர் பயந்து கொண்டு ஏன் சென்​னைக்கு வந்​தார்? அவர் ஒரு பிரபல​மான நடிகர்.

    அவர் இருந்​தால் மீண்​டும் கும்​பல்​கூடும். எனவே, அவர் திருச்​சி​யில் தங்கி கொண்​டு, நிர்​வாகி​களை கொண்டு பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆறு​தல் கூறி நிவாரணம் வழங்​கி​யிருக்​கலாமே, அவர்​களிடம் குற்​றவுணர்வு இருக்​கிறது. அதனால் அவர்​கள் ஓடிவந்​து​விட்​டார்​கள் என்​பது​தான் உண்​மை.

    ஆதவ் அர்ஜுனா மீது புகார்: இதுத​விர தவெக நிர்​வாகி ஆதவ் அர்​ஜுனா ஒரு பதிவை போடு​கிறார். அதில் நேபாளத்​தில் நடந்​தது போல, இங்கு ஒரு புரட்சி நடக்​கும் என்​கிறார். அரசி​யலமைப்​புக்கு எதி​ரான ஒரு கருத்தை பதி​விட்​டு, அதற்கு விமர்​சனம் வந்​தவுடனே எடுக்​கிறார். இப்​படிபட்ட பதிவு​களை போடு​கிற ஒரு​வரை கண்​டிக்​காமல், கட்​சியை விட்டு நீக்​காமல் விஜய் வைத்​துக் கொண்​டிருக்​கிறார். எனவே, அரசி​யல் புரிதல் இல்​லாமல் சிறு​பிள்​ளைத்​தன​மாக இப்​படி நடந்​து கொள்​வது, தமிழகத்​துக்​கு நல்​லதல்​ல. இவ்​வாறு அவர்​ கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உழைப்பே வறுமையை போக்கி வளம் சேர்க்கும்: அரசியல் தலைவர்கள் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

    October 2, 2025
    மாநிலம்

    “செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை 

    October 1, 2025
    மாநிலம்

    15 ஆண்டுக்கு மேலான அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதி

    October 1, 2025
    மாநிலம்

    புதிய டிஜிபி தேர்வு பட்டியலில் 3 பேர் இடம் பிடித்தனர்

    October 1, 2025
    மாநிலம்

    எ.வ.வேலுவை எதிர்த்து வென்றால் அமைச்சர் பதவி? – திருவண்ணாமலைக்கு எடப்பாடியாரின் அதிரடி ஆஃபர்!

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் நெரிசல் முதல் 10 ரூபாய் விவகாரம் வரை: செந்தில் பாலாஜி கூறியது என்ன?

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உழைப்பே வறுமையை போக்கி வளம் சேர்க்கும்: அரசியல் தலைவர்கள் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து
    • நீங்கள் மெல்லும் கம் விழுங்கினால் என்ன ஆகும், அறிவியல் ஏழு ஆண்டு கட்டுக்கதையை நீக்குகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை 
    • பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி இலையுதிர்காலத்தில் சாளர ஒடுக்கத்தை எவ்வாறு தடுப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 15 ஆண்டுக்கு மேலான அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.