Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு போன வைகை அணை: குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பா?
    மாநிலம்

    ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு போன வைகை அணை: குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பா?

    adminBy adminMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு போன வைகை அணை: குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆண்டிபட்டி: தேனி மாவட்ட ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது

    தேனி மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து பல வாரங்களாகியதால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மூல வைகையைப் பொறுத்தளவில் பல வாரங்களாக வறண்ட நிலையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதியில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நீர் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்திய பிறகு எஞ்சியுள்ள நீரையும் சூடான ஆற்றுப் படுகைகள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் வைகை அணைக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்து நேற்று பூஜ்ய நிலையை அடைந்துள்ளது. ஆகவே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    தற்போது, தேனி மாவட்டத்தில் மூல வைகை, பெரியாறு மற்றும் துணை ஆறுகள் எதிலும் நீரோட்டம் இல்லை. மேலும் இரண்டாம் போக சாகுபடி முடிந்தததால் கால்வாய் வழியே திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப் பட்டுள்ளது. நீர் ஆதாரங்களில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், குடிநீர் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    நீர்வரத்து இல்லாததால் பாறைகளாக காட்சியளிக்கும் முல்லை பெரியாறு. இடம்: தேனி கருவேல் நாயக்கன்பட்டி. படம்:என்.கணேஷ்ராஜ்.

    வைகை அணையைப் பொறுத்தளவில் குடிநீர் திட்டங்களுக்காக 72 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றன. நீர்வரத்து இல்லாததால் கோடை காலத்தை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், “நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்றே தொடங்க உள்ளது. தமிழக – கேரள எல்லையில் மழைப் பொழிவு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நீர் உள்ளது.” என்று கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    July 18, 2025
    மாநிலம்

    ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு

    July 18, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு

    July 18, 2025
    மாநிலம்

    புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து: தடையை மீறி தவெக பேனர்

    July 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    July 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் நிதி, மொழி, கல்வியுரிமையை நிலைநாட்ட குரல்: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி
    • உங்கள் ஆரோக்கியத்திற்கு அமைதியாக தீங்கு விளைவிக்கும் 5 காபி குடிக்கும் பழக்கம், நிபுணர்கள் கூறுகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு
    • அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்
    • ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.