Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளது.

    பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் உள்ள தனது வீட்டருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

    இந்த வழக்​கில் சிறை​யில் உள்ள பிரபல ரவுடி நாகேந்​திரன், அவரது மகனும், முன்​னாள் இளைஞர் காங்​கிரஸ் நிர்​வாகி​யு​மான வழக்​கறிஞர் அஸ்​வத்​தாமன், ரவுடி ஆற்​காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்​சலை, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள், பெண்​கள் என மொத்​தம் 27 பேர் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்பட்டுள்​ளனர்.

    ரவுடி திரு​வேங்​கடம் என்​பவர் போலீ​ஸா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் தொடர்ந்து தலைமறை​வாக உள்ள சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீ​ஸார் கடந்த ஓராண்​டாக தேடி வரு​கின்​றனர். இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​ஸார் 5 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். தற்​போது இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வரு​கிறது.

    இந்​நிலை​யில் இந்த வழக்கை போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், ஒரு தேசிய கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த தனது சகோ​தரரின் படு​கொலை வழக்கை செம்​பி​யம் போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை.

    இந்த கொலை​யில் பல முக்​கிய அரசி​யல் புள்​ளி​களுக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. கொலை​யில் தொடர்​புடைய சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என மனுவில் கூறியிருந்​தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக நடந்து வந்​தது. அப்​போது காவல்​துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்.முனியப்​ப​ராஜ், இந்த வழக்​கில் உடனடி​யாக 27 பேர் கைது செய்​யப்​பட்டு அவர்​களுக்கு எதி​ராக குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​டது. நீதி​மன்​றத்​தில் விசா​ரணை சரி​யான கோணத்​தில் தான் நடந்து வரு​கிறது என வாதிட்டார்.

    மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் யோகேஷ் கண்​ணா, இந்த வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக​வுள்ள ரவுடி நாகேந்​திரனுடன் நெருக்​க​மாக இருந்த தமிழக காங்​கிரஸில் முக்​கிய பொறுப்​பில் உள்ள தலை​வரிடம் இது​வரை எந்த விசா​ரணை​யும் நடத்​தப்​பட​வில்​லை.

    இந்த வழக்​கில் கைதான திரு​வேங்​கடம் ஏன் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார் என்​பது குறித்​தும் போலீ​ஸார் தெளிவுபடுத்​த​வில்​லை. பல உண்​மை​களை மறைத்து போலீ​ஸார் அவசரக​தி​யில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்​ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்​டும் என வாதிட்​டிருந்​தார். இருதரப்​பிலும் வாதங்​கள் நிறைவடைந்த நிலை​யில் இந்த வழக்​கின் தீர்ப்பு தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளிவைக்​கப்​பட்​டிருந்​தது.

    இந்​நிலை​யில் நீதிபதி பி.வேல்​முரு​கன் நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யும், சிபிஐ அதி​காரி​கள் அரசி​யல் குறுக்​கீடோ, ஊடக குறுக்​கீடோ இல்​லாமல் சுதந்​திர​மாக விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென உத்​தர​விட்​டார்.

    இதே​போல ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்​றக்​கோரி ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி தொடர்ந்த வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் மற்​றொரு தனி நீதிபதி முன்​​பாக நிலு​வை​யில்​ இருந்​து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

    September 25, 2025
    மாநிலம்

    சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்

    September 25, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு: பால் பொருட்கள் விலையை ஆவின் குறைக்க நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் வலியுறுத்தல்

    September 25, 2025
    மாநிலம்

    நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: கிராந்தி குமார் பாடி தகவல்

    September 25, 2025
    மாநிலம்

    குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு: ஐகோர்ட் உத்தரவு

    September 25, 2025
    மாநிலம்

    அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் தவெக ஈடுபட்டதாக வீடியோ: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
    • மிலிண்ட் சோமன் காலை உணவுக்கு தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார், அவர் ஏன் 60 வயதில் இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை இப்போது நாங்கள் அறிவோம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு
    • சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்
    • தேங்காய் மலாய் சாப்பிடுவது ஏன் ஆற்றல், இதயம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.