Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 6 மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என, முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காவல்துறை தரப்பில், “27 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்துள்ளதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று (செப்.23) தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறித்தினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முன்னாள் முதல்வர் நாராயணசாமி திடீர் போராட்டம்

    September 24, 2025
    மாநிலம்

    விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து

    September 24, 2025
    மாநிலம்

    கிலோ மீட்டர் அலவன்ஸை 25% உயர்த்தக் கோரி சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

    September 24, 2025
    மாநிலம்

    மதுரை ஹாக்கி மைதானம் தென் தமிழக வீரர்கள் பயிற்சி எடுக்க சிறந்த தளம் : உதயநிதி பெருமிதம்

    September 24, 2025
    மாநிலம்

    சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

    September 24, 2025
    மாநிலம்

    ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்தை இயக்கும் ’மார்கோ’ இயக்குநர்?
    • புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முன்னாள் முதல்வர் நாராயணசாமி திடீர் போராட்டம்
    • க்யூராமியை முத்தமிடுவதற்கு மூன்று புள்ளிகள் க ou ராமி: வீட்டு மீன்வளங்களுக்கான 5 அழகான க ou ராமி மீன்-கவனிப்பு, உணவு மற்றும் தொட்டி உதவிக்குறிப்புகள்
    • ஆர்ட்டெமிஸ் II 2026: பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்ட 50 ஆண்டுகளில் சந்திரனைச் சுற்றி வட்டமிட நாசா முதல் குழுவினரைத் தயாரிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லாரன்ஸ் உடன் இணையும் ‘ரெபல்’ இயக்குநர்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.