Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

    adminBy adminJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. இந்த கொலையில் தொடர்புடைய ‘சம்போ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.” என கேட்கப்பட்டது. இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செயற்கைக் கோள் தரவுகள், ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்

    July 4, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    July 4, 2025
    மாநிலம்

    மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    July 4, 2025
    மாநிலம்

    தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் ‘யுமிஸ்’தளம் வாயிலாக 9.40 லட்சம் மாணவர்கள் பயன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

    July 4, 2025
    மாநிலம்

    நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி: கிருஷ்ணகிரியில் அறிமுகம் – சிறப்பு அம்சம் என்ன?

    July 3, 2025
    மாநிலம்

    “காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்” – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செயற்கைக் கோள் தரவுகள், ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்
    • நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
    • புதிய ஆய்வில் தாவரங்கள் சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துகின்றன மற்றும் வெப்பத்தை உணரவும் பதிலளிக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து
    • மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.