சென்னை: ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆக. 1-ல் நடைபெறுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 22-ல் தொடங்கி 27-ம் தேதியுடன் முடிவடைந்தது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 30-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் மனமொத்த மாறுதலுக்கு துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கு துறை அலுவலர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் ஒப்புதல் தரவேண்டும். அதன்பின் கலந்தாய்வு ஆக. 1-ல் நடத்தப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக மாறுதல் ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.