Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: ஐகோர்ட் அறிவுரை
    மாநிலம்

    அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: ஐகோர்ட் அறிவுரை

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: ஐகோர்ட் அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: அற்பமான காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது சட்ட விரோதமானது. சிலர் நீதிமன்றத்தையும், போலீஸாரையும் மிரட்டும் நோக்கத்தில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

    காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் போது சில நேரங்களில் அந்த வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். அப்போது கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற புறக்கணிப்பு 90 சதவீதம் நியாயமற்ற காரணங்களுக்காக நடத்தப்படுகிறது.

    இதுபோன்ற சட்டவிரோத நீதிமன்ற புறக்கணிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தொடர்கிறது. எனவே, நியாயமற்ற கோரிக்கைகளுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், நீதிபதி ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

    சட்டத் தொழில் ஓர் உன்னதமான தொழிலாகும். வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது. வழக்கறிஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்கள் அல்லது வழக்கறிஞர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல. பொதுவான காரணமாக இருந்தால் பார் கவுன்சிலை் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

    அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பின் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்துக்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது. இந்த வழக்கில் நெல்லை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டால் அது தொடர்பாக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும்: இபிஎஸ்

    September 13, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    September 13, 2025
    மாநிலம்

    “வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு

    September 13, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

    September 13, 2025
    மாநிலம்

    சென்னையில் 16-ம் தேதி தமிழக பாஜக தலைவர்கள் முக்கிய ஆலோசனை

    September 13, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாசவேலைக்காக உளவாளிகளை அனுப்பிய விவகாரம்: பாகிஸ்தான் தூதர் அக்.15-ல் ஆஜராக உத்தரவு

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்
    • கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கக்கூடிய நகங்களில் 7 மாற்றங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு சுசீலா கார்கி வழிவகுப்பார்” – மோடி நம்பிக்கை
    • ‘டெட்’ தேர்வுக்கு தடையில்லாச் சான்று பெற தேவையில்லை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தல்
    • உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்: எடை இழப்பு ஏன் தோற்றத்தை விட அதிகம் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.