Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    மாநிலம்

    அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்துதல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு கல்வி சார்ந்த அறப்பணிகளையும் சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

    2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் எழும்பூர், சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,035 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் கடந்தாண்டு ரூ.1.78 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

    மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பில் கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் இக்கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2024-ல் அடிக்கல் நாட்டினார். வரும் கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் புதிய கட்டடத்தில் நடைபெறும் வகையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்துகொண்டனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

    June 30, 2025
    மாநிலம்

    44-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் 58,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

    June 29, 2025
    மாநிலம்

    வீரப்பனுக்கு மணிமண்டபம்: அமைச்சரிடம் முத்துலட்சுமி கோரிக்கை

    June 29, 2025
    மாநிலம்

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!

    June 29, 2025
    மாநிலம்

    ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்

    June 29, 2025
    மாநிலம்

    ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’
    • திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
    • ‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?
    • 44-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் 58,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
    • ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? – பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.