Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரூர்: சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சரை தடுத்து வாக்குவாதம்; 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது
    மாநிலம்

    அரூர்: சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சரை தடுத்து வாக்குவாதம்; 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரூர்: சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சரை தடுத்து வாக்குவாதம்; 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 09 May, 2025 02:45 PM

    Published : 09 May 2025 02:45 PM
    Last Updated : 09 May 2025 02:45 PM

    அரூர்: சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சரை தடுத்து வாக்குவாதம்; 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது
    அரூர் கோபாலபுரம் சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரனை தடுக்க முயன்ற அதிமுக எம்எல்ஏக்கள் 

    அரூர்: அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (மே 9) காலை வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோர் தடுத்து நிறுத்தி , ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலையில் அமைக்கப்பட்ட இணை மின் நிலையம் பற்றிய கேள்விக்கு 40% பணிகள் நிறைவேற்றியதாக கூறினீர்கள். அப்படி பணி நடந்திருந்தால் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் இல்லையென்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாரா? என கோவிந்தசாமி எம்எல்ஏ அமைச்சரிடம் சவால் விட்டார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க. காவல் துறையினர் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிமுகவினரை தடுத்து, அமைச்சரை ஆய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அங்கிருந்தவர்கள் அமைச்சரை அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கு நடந்த விவசாயிகள் சங்க ஆய்வு கூட்டத்திலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்று பேசினர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசும்போது, “அமைச்சர் சட்டசபையில் பேசும்போது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ள இணை மின் நிலையம் 40% பணிகள் நடைபெற்றதாக அமைச்சர் தவறான தகவல் தருகிறார்” எனக் கூறினார். இதையடுத்து அங்குள்ள திமுகவைச் சேர்ந்தவர்கள் இரண்டு எம்எல்ஏக்களும் வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் திமுக – அதிமுகவினர் இடையே மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனால் போலீஸார் இரு அதிமுக எம்எல்ஏக்களையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றி, கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர்களுடன் அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் 19 அதிமுகவினர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் சர்க்கரை ஆலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக வாக்குறுதி அளித்தபடி பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது

    July 9, 2025
    மாநிலம்

    சென்னையில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்: மாதிரி வடிவமைப்பை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்

    July 9, 2025
    மாநிலம்

    ஹஜ் பயணத்துக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

    July 9, 2025
    மாநிலம்

    தேர்தல் படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்: பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் திட்டவட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

    July 9, 2025
    மாநிலம்

    தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் செல்போன், பைக், டிராக்டர் திருட்டு
    • திமுக வாக்குறுதி அளித்தபடி பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது
    • பாரத் பந்த் புதுப்பிப்பு: சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதால் போக்குவரத்து குறும்புகளுக்கான பெங்களூரு பிரேஸ்கள்; தவிர்க்க வேண்டிய வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
    • சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநர் உருக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.