Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    மாநிலம்

    அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    adminBy adminJuly 2, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கோயில் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரப்படுத்தவும், சிபிஐடி விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி திருப்புவனம் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மேலும், அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உட்பட 5 பேர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர் வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மாரீஸ்குமார் வாதிடும்போது, “சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததும் விதிமீறல்தான்.

    அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலாளர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் ஒரு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுப்பதாகவும், சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

    அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை சிறப்புப் படையிடம் ஒப்படைத்தது யார்? அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வெறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல சிறப்புப் படைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எஸ்.பி.யை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? பாதுகாக்க வேண்டிய காவல் துறையே மக்களைத் தாக்கலாமா? சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைப் பாதுகாக்கவே என்பதை போலீஸார் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

    சட்டவிரோத காவல் மரணம், அடிப்படை உரிமைக்கு எதிரானது. திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையையும், மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வீடியோ பதிவையும், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் ஆஜராகி, பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

    அதைப் படித்துப் பார்த்த நீதிபதி, “உடலில் ஓர் இடம்கூட விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியுள்ளனர். வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரம் போலீஸாரை இப்படி செய்ய வைத்துள்ளது. விசாரணையின்போது அஜித்குமார் குற்றவாளி இல்லை. எஃப்ஐஆர் பதிவு

    செய்வதற்கு முந்தைய விசாரணையின்போது இப்படி ஒருவரைத் தாக்கலாமா? இந்த சம்பவத்தின் இயக்குநர் யார்?” என்றனர்.

    மேலும், ‘‘அஜித்குமார் கொலை சிறப்புப்படை திட்டமிட்டு செய்த கொலையாகும். ஒரு அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது. இதனால் இதை சாதாரண கொலை வழக்குபோல இல்லாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அஜித்குமார் காவல் மரணம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிவகங்கை மாவட்ட காவல் துறை நாளை (இன்று) காலை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட நீதிபதி விசாரணை தொடர்பாக ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அடுத்தகட்ட விசாரணை தொடர்பாகவும் அரசுத் தரப்பில் ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு உரிய போலீஸ் பாகாப்பு வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

    July 2, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி டெல்லி பயணம்

    July 2, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    July 2, 2025
    மாநிலம்

    அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

    July 2, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

    July 2, 2025
    மாநிலம்

    வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால் ஆதரவற்று தவிக்கும் குடும்பம்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது
    • வைரஸ் கச்சேரி வீடியோவில் பியோன்சின் மகள் ரூமி இல்லுமினாட்டி அச்சங்களைத் தூண்டுகிறார், குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக நெட்டிசன்ஸ் ஸ்லாம் சிங்கர்
    • உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து
    • ஆளுநர் ரவி டெல்லி பயணம்
    • லாரன் சான்செஸின் குழந்தைகளான நிக்கோ கோன்சலஸ், இவான் மற்றும் எல்லா வைட்செல்: முன்னாள் காதலன் மற்றும் முன்னாள் கணவருடன் அவரது மூன்று குழந்தைகளைப் பற்றி சந்திக்கவும்-டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.