Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை
    மாநிலம்

    அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மேட்​டூரில் இருந்து சென்​னைக்கு பாத​யாத்​திரை மேற்​கொண்ட அரசு மருத்​து​வர்​கள் சங்​கத் தலை​வர் டாக்​டர் பெரு​மாள் பிள்​ளை​யை, சென்​னை​யில் இருந்து நாகப்​பட்​டினத்​துக்கு பணி​யிட​மாறு​தல் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவரை திரு​வள்​ளூருக்கு மாற்​றம் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

    தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்​கேற்ப மருத்​து​வர்​களை​யும், செவிலியர்​களை​யும் நியமிக்க வேண்​டும். அரசு மருத்​து​வர்​களுக்கு அரசாணை 354-ன்​படி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தனின் மனை​விக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக்​குழு தலை​வ​ரான டாக்​டர் பெருமாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை சேலம் மேட்​டூரில் இருந்து சென்னை மெரி​னா​வில் உள்ள முன்​னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடம் நோக்கி பாத​யாத்​திரை மேற்​கொண்​டனர். தேனாம்​பேட்டை வந்​த​போது, போலீ​ஸா​ரால்

    கைது செய்​யப்​பட்​டு, பின்​னர் மாலை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்துவ​மனை​யில் இணை பேராசிரிய​ராகப் பணி​யாற்றி வந்த டாக்​டர் பெரு​மாள் பிள்ளை அனு​ம​தி​யின்றி விடுப்பு எடுத்துள்ளதாகக் கூறி, நாகப்​பட்​டினம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு பணி​யிட மாற்​றம் செய்​தும், அவருக்கு குற்ற குறிப்​பாணை வழங்​கி​யும் தமிழக அரசு உத்​தர​விட்​டது. அதைத்​தொடர்ந்​து, தன்னை பழி​வாங்​கும் ரீதி​யாக நாகப்​பட்​டினத்​துக்கு இடமாறு​தல் செய்து பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள உத்​தர​வுக்கு தடை விதிக்​கக் கோரி பெரு​மாள் பிள்​ளை, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்​திரா முன்​பாக நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கவுதமன், “அரசு மருத்​து​வர்​களின் நியாய​மான கோரிக்​கையை நிறைவேற்​றக்​கோரி உயர் அதி​காரி​களிடம் அனு​மதி கடிதம் கொடுத்​து​விட்டு அதன்​பிறகே மனு​தா​ரர் அமை​தி​யான முறை​யில் சக மருத்​து​வர்​களு​டன் பாத​யாத்​திரை மேற்​கொண்​டார். இந்​நிலை​யில், அவரை நாகப்​பட்​டினத்​துக்கு இடமாறு​தல் செய​திருப்​பது சட்​ட​விரோத​மானது” என வாதிட்​டார்.

    அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.பிந்​திரன், “இதுதொடர்​பாக அரசின் பதில்​மனுவை தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்​டும். மனு​தா​ரருக்கு இடைக்​கால நிவாரண​மாக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி குழந்​தைகள் நலப் பிரி​வில் இணை பேராசிரிய​ராக பணி வழங்க அரசு தயா​ராக உள்​ளது” என தெரி​வித்​தார்.

    அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரரை நாகப்​பட்​டினத்​துக்கு இடமாற்​றம் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வுக்கு இடைக்​காலத்தடை விதித்​தும், திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அவருக்கு இடமாறு​தல் வழங்​க​வும் உத்​தர​விட்​டார். பி்ன்​னர், இந்த வழக்​கில் தமிழக அரசு இரு​வார காலத்​தில் பதிலளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை

    September 24, 2025
    மாநிலம்

    போட்டியிட்டே ரெண்டு மாமாங்கமாச்சு… தேனியில் தேய்ந்து வரும் காங்கிரஸ்!

    September 24, 2025
    மாநிலம்

    டிடிவி தினகரன் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை – நடந்தது என்ன?

    September 24, 2025
    மாநிலம்

    நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

    September 24, 2025
    மாநிலம்

    நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

    September 24, 2025
    மாநிலம்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை
    • மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு
    • போட்டியிட்டே ரெண்டு மாமாங்கமாச்சு… தேனியில் தேய்ந்து வரும் காங்கிரஸ்!
    • டிடிவி தினகரன் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை – நடந்தது என்ன?
    • அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.