Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்
    மாநிலம்

    அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்

    adminBy adminAugust 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் அவுட்​சோர்​சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நேரடி பணிநியமனங்​களின் எண்​ணிக்கை குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​குத் தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பஇஎஸ்​சி) மூல​மாக​வும், அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாக​வும், காவல், தீயணைப்​பு, சிறைத் துறைப் பணி​யாளர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வுசெய்​யப்​பட்டு பணி​யில் அமர்த்​தப்​படு​கிறார்​கள். மருத்​து​வர்​கள், செவிலியர்கள் உள்​ளிட்ட மருத்​து​வப் பணி​யாளர்​கள் எம்​ஆர்பி எனப்​படும் மருத்​து​வப் பணி​கள் தேர்வு வாரி​யம் மூல​மாக தேர்​வுசெய்​யப்​படு​கின்​றனர்.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களி​லும், அரசுப் பள்​ளி​களி​லும் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் பணி​யாற்றி வரு​கின்​றனர். அரசுப் பணி​யில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி பணி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும், அவற்றை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என்​றும் அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. இதற்​கிடையே, 2026-ம் ஆண்டு ஜனவரிக்​குள் அரசுப் பணி​யில் 75 ஆயிரம் காலி பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்​டப்​பேர​வை​யில் அறி​வித்​தார். பேரவை விதி 110-இன் கீழ் அறி​விப்பை வெளி​யிட்​டுப் பேசிய அவர், “தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக 17, 595 பணி​யிடங்​களும், ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக 19,260 ஆசிரியப் பணி​யிடங்​களும், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 3,041 பணி​யிடங்​களும், தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 6,688 பணி​யிடங்​களும் நிரப்​பப்​படும்.

    2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்​துக்​குள் மொத்​தம் 46,584 பணி​யிடங்​கள் மற்​றும் சமூக நலத்​துறை, நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை உள்​ளிட்ட முக்​கிய துறை​களில் காலி​யாக​வுள்ள 30,219 பணி​யிடங்​கள் என மொத்​தம் 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்”என்று குறிப்​பிட்​டார். இந்​நிலை​யில், அரசு மற்​றும் பொதுத் துறை நிறு​வனங்​களுக்கு அவுட்​சோர்​சிங் முறை​யில் (வெளி​முகமை) ஆட்​களை நியமிக்​கும் பொறுப்பு சென்னை கிண்​டி​யில் உள்ள அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. அந்​நிறு​வனம் அவுட்​சோர்​சிங் பணிநியமன பணி​களுக்​கான முதல் கட்ட பணி​களை தொடங்​கி​யுள்​ளது. அரசு மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களுக்கு வெளி​முகமை (அவுட்​சோர்​சிங்) முறை​யில் பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் ஒப்​பந்​தப்​புள்​ளியை​யும் கோரி​யுள்​ளது.

    இதுகுறித்து உயர​தி​காரி ஒரு​வர் கூறும்​போது, “அரசுத் துறை​களில் ஏற்​படும் தற்​காலிக பணி​யிடங்​கள், குறிப்​பாக கணக்கு அலு​வலர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்​டர் போன்ற பணி​கள் அவுட்​சோர்​சிங் முறை​யில் வெளிநிறு​வனங்​கள் வாயி​லாக மேற்​கொள்​ளப்​படும். நிரந்தர பணி​யிடங்​கள் வழக்​கம்​போல தேர்​வாணை​யங்​கள் வாயி​லாகவே நிரப்​பப்​படும்” என்​றார்.

    அவுட்​-சோர்​சிங் பணிநியமன முறை​யால் அரசுப் பணி​களுக்​கான நேரடிப் பணி​யிடங்​கள் பெரு​மளவு குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ள​தாக அரசு ஊழியர் சங்க நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றிய மாநிலத் தலை​வர் த.அமிர்​தகு​மார் கூறியதாவது: 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​யில், அரசுத் துறை​களில் அவுட்​சோர்​சிங் முறை முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது. இது​வரை அந்த வாக்​குறு​தியை நிறைவேற்​ற​வில்​லை. முதலில் ஆங்​காங்கே அவுட்​சோர்​சிங் முறை நியமனம் மேற்​கொள்​ளப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது பல துறை​களில், குறிப்​பாக சுகா​தா​ரத் துறை​யில் அதிக எண்​ணிக்​கை​யில் அவுட்​சோர்​சிங் முறை நியமனங்​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. அவுட்​சோர்​சிங் முறை நியமனத்​தால் அரசின் செலவு குறை​யும் என்று அரசு கருதலாம்.

    ஆனால், நிரந்தர அரசு ஊழியர்​களாக இருந்​தால் அவர்​களுக்கு பொறுப்​புணர்வு உண்​டு. அதே​நேரத்​தில், அவுட்​சோர்​சிங் ஊழியர்​கள் பொறுப்​புணர்​வுடன் செயல்பட மாட்​டார்​கள். இதனால். அரசு நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடை​பெறும். அவுட்​சோர்​சிங் முறை​யால் இளைஞர்​களின் அரசு வேலை கன​வும் தகர்ந்து போகும். எனவே, தமிழக அரசு அவுட்​சோர்​சிங் முறை நியமனத்​தை உடனடி​யாக கைவிட வேண்​டும்​ என்​றார்​. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்

    September 15, 2025
    மாநிலம்

    “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    ரயில்கள் மீது கல் எறிபவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை: தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

    September 15, 2025
    மாநிலம்

    திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.​வாசன் அறிவிப்பு

    September 15, 2025
    மாநிலம்

    தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

    September 15, 2025
    மாநிலம்

    விரைவில் 3 எம்எல்ஏக்கள் என்னுடன் வருவார்கள்: ராமதாஸ் நம்பிக்கை

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்
    • விண்டேஜ் சேலை கிராஸுக்குப் பிறகு, AI- உருவாக்கிய கர்பா இன்ஸ்டாகிராமில் வைரலாகத் தெரிகிறது: கூகிள் ஜெமினியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த ரீலை உருவாக்க மேல் கேட்கும் மற்றும் படிப்படியான வழிகாட்டியை சரிபார்க்கவும்
    • ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!
    • இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் ‘கலாம் சபா’ – வி.டில்லிபாபு பெருமிதம்
    • “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.