Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
    மாநிலம்

    அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். சென்னை நந்​தனம் அரசு கலைக்கல்​லூரி​யில் “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு” நேற்று தொடங்​கப்​பட்​டது. இக்​குழுவை உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன், மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர்.

    இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே உயர்​கல்​வி​யில் தமிழகம் உயர்ந்த நிலை​யில் இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களைச் செயல்​படுத்தி வரு​கிறார். ஆண்​டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கும் இலக்​குடன் தொடங்​கப்​பட்ட `நான் முதல்​வன்’ திட்​டத்​தில் கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் 41 லட்​சம் பேருக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது.

    இதன் காரண​மாக, முன்​னெப்​போதும் இல்​லாத அளவில் அகில இந்​திய குடிமைப்​பணித் தேர்​வில் வெற்​றி​பெறும் தமிழக மாணவர்களின் எண்​ணிக்கை உயர்ந்​துள்​ளது.‘புது​மைப் பெண்’ என்ற திட்​டத்​தின் மூலம் உயர்​கல்​வி​யில் சேர்க்கை பெறும் மாணவி​களுக்கு கல்வி உதவித்​தொகை​யாக மாதம்​தோறும் ரூ.1,000 வழங்​கப்​படு​கிறது.

    இதனால் உயர்​கல்​வி​யில் மாணவி​களின் சேர்க்கை உயர்ந்​துள்​ளது. மாணவர்​களும் பயன்​பெறும் நோக்​கில் ‘தமிழ் புதல்​வன்’ திட்டத்​தை​யும் முதல்​வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    மாணவர்​கள் கல்வி பயிலும் இடங்​களில் உரிய புரிதலுடன் பாலின பாகு​பாடின்​றிச் செயல்பட ஏது​வாக “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்வு குழு” உயர்​கல்வி நிறு​வனங்​களில் அமைக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

    அதன்​படி, தற்​போது நந்​தனம் கல்​லூரி​யில் பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு​வின் செயல்​பாடு தொடங்​கப்​பட்​டுள்​ளது. இது போன்று தமிழகத்​தில் உள்ள அனைத்து கல்​லூரி​களி​லும் இக்​குழு அமைக்​கப்​படும்.

    உளவிய​லா​ளர்​கள், சமூக​வியல் அறிஞர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பெண்​ணுரிமை வல்​லுநர்​கள், மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட அனை​வரின் வழி​காட்​டு​தலுடன் இக்​குழுக்​கள் மாணவ-​மாணவி​களுக்கு தேவை​யான புரிதலை​யும், விழிப்​புணர்​வை​யும் ஏற்படுத்தும். மேலும், பெற்​றோர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே உறவை வலுப்​படுத்​த​வும் உதவும். கட்​டமைக் கப்​பட்ட சமு​தா​யத்தை உரு​வாக்​கு​வதே இதன் முக்​கிய நோக்​க​ம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசுகை​யில், “மாணவர்​கள் பாலின விழிப்​புணர்வு தொடர்​பாக நடத் தப்​படும் கருத்​தரங்​கு​கள் மற்​றும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளில் தவறாமல் பங்​கேற்க வேண்​டும்” என்று கேட்​டுக்​கொண்​டார். இந்நிகழ்ச்​சி​யில், கல்​லூரி கல்வி ஆணை​யர் எ.சுந்​தர​வல்​லி, கல்​லூரி முதல்​வர் வே.பு​கழேந்​தி, குழு​வின் தலை​வர் மு.மஜிதாபர்வின், மருத்​து​வர் திரு​மகள்​ மற்​றும்​ குழு உறுப்​பினர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆக.11 முதல் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கம்

    August 9, 2025
    மாநிலம்

    தொழிலாளர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    August 9, 2025
    மாநிலம்

    விநாயகர் சிலைகளை இயற்கை பொருட்களால் செய்ய வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

    August 9, 2025
    மாநிலம்

    மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவினர் அதிருப்தி

    August 9, 2025
    மாநிலம்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    August 9, 2025
    மாநிலம்

    விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்
    • ஆக.11 முதல் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கம்
    • இத்தாலிய ‘நித்திய இளைஞர்களின் நிலம்’ 10 பேரில் 1 பேர் 100 க்கு அப்பால் வாழ்கின்றனர் – இங்கே அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்
    • தொழிலாளர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.