Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு
    மாநிலம்

    அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு

    adminBy adminAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

    ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணி, புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப் போன்ற திட்டங்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்திவிட்டது.

    அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத் தப்படும். அதிமுக ஜனநாயகம் நிறைந்த கட்சி. அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்குத்தான் திமுகவில் முக்கிய பதவி கிடைக்கிறது. திமுகவில் திறமையான ஆட்கள் கிடையாது. அடுத்தமுறை ஆட்சிக்கு வர முடியாது என்கிற முடிவில்தான், திமுகவினர் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர்.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரம் குறைந்துள்ளது. போதிய ஆசிரியர் இல்லாததாலும், தரமான கல்வி கிடைக்காததாலும் அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறி, தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர்.

    சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அதிமுக என்ற அவதூறான பிரச்சாரத்தை திமுக செய்து வருகிறது. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் மானியம், ஹஜ் இல்லம் கட்ட நிதி உதவி, உலமாக்கள் ஓய்வூதியம், தேவாலயங்கள் புதுப்பிக்க நிதி, ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதி உதவி என பல்வேறு நலத்திட்ட திட்டங்களை வழங்கியுள்ளது.

    அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கியது. இதை சிறுபான்மையினர் உணர வேண்டும். ஆதரவு வழங்குவதும், வழங்காததும் உங்கள் விருப்பம். ஆனால், திமுக கூட்டணி கட்சியினர் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை மட்டும் நம்பாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல் துறையில் புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையத்துக்கு தலைவராகிறார் சங்கர் ஜிவால்

    August 26, 2025
    மாநிலம்

    சிலைகளுக்கான தொல்பொருள் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மாற்றுக: உலோக சிற்பக் கலைஞர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தல்

    August 26, 2025
    மாநிலம்

    சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வருகை: பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோருகிறார்

    August 26, 2025
    மாநிலம்

    வைக்கம் விருதுக்கு செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

    August 26, 2025
    மாநிலம்

    சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி

    August 26, 2025
    மாநிலம்

    கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிப்பு: விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும்
    • இருதயநோய் நிபுணர் நீண்ட ஆயுளுக்கு ஏன் உடற்பயிற்சி முக்கியமானது என்பதை விளக்குகிறார்; ‘புகைபிடிப்பதை விட செயலற்ற தன்மை மோசமானது’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொழில்துறை கழிவுநீரை சுத்தம் செய்ய இந்திய ஆராய்ச்சியாளர்கள் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா
    • காவல் துறையில் புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையத்துக்கு தலைவராகிறார் சங்கர் ஜிவால்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.