Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளேன். கட்டுமானத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் அரசுத் துறைகளில் முறையாக டெண்டர் எடுத்து, அரசு திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு 2025- 2026 ஆண்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை வெளியிடப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட்டால் மட்டுமே, அந்த விலைப் பட்டியல் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி தயாரிக்க முடியும்.

    2024-2025 ஆண்டு விலை நிர்ணய தொகையின் அடிப்படையில் தற்போது ஏலம் நடத்தப்படுகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட சிமென்ட், ஜல்லி, மணல் விலை தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டிடத் தொழிலாளர்களின் சம்பளமும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், அரசு இந்த ஆண்டுக்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.

    இது தொடர்பாக தமிழக நிதித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு ஒப்பந்ததாரர்களுக்கான இந்த ஆண்டு கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து, “ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் விலை நிர்ணய பட்டியலை இன்னும் ஏன் வெளியிடவில்லை? இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கேட்க முடியும்? விலைவாசி உயர்ந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு

    June 29, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    June 29, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    June 29, 2025
    மாநிலம்

    கலாநிதி – தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்… கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?

    June 29, 2025
    மாநிலம்

    செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

    June 29, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்: நாளை முறைப்படி அறிவிப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு
    • முன்கூட்டியே திட்டமிடல் தேவையில்லாத பெங்களூரில் இருந்து ஒரு நாள் பயணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?
    • ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! – படக்குழு அறிவிப்பு
    • திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.