Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    மாநிலம்

    “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    adminBy adminSeptember 15, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர, அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று சென்​னை​யில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன்… உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.

    இன்றைக்கு மிகவும் முக்கியமான நாள். அண்ணா பிறந்தநாள். நம்முடைய தாய் நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் அவருடைய பிறந்த நாள். “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இன்று, இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவுக்கு நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.

    திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது – தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம். அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    மக்களுடைய தேவைகளை, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை.

    நீங்களே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். காலையில் ஒரு இடத்தில் மக்கள்கூட பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல நூறு கிலோமீட்டர் கடந்து இன்னொரு ஊரில்… இன்னொரு பகுதியில் மக்கள்கூட இருப்பேன். இந்த உழைப்பைத்தான், பெரியார் -அண்ணா – கலைஞர் ஆகியோர், எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கின்ற காரணத்தால்தான், கடைக்கோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து எங்களால் செய்ய முடிகிறது.

    அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது.

    இன்றைக்கு, தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இன்றைக்கு, 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?

    சமூகத்தின் விளிம்பு நிலையில், எண்ணிக்கையில் சில நூறு – சில ஆயிரம் மட்டுமே இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் ஆகியோருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இன்னும் சொல்கிறேன்… நம்முடைய திராவிட மாடல் அரசு, என்ன மாதிரியான நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

    கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. ஏராளமான உயிர்கள் பறிபோனது. பலருடைய தொழில்கள் எல்லாம் முடங்கிப் போனது. பல குடும்பங்கள் தங்களுடைய முதுகெலும்பை இழந்து, பலவீனப்பட்டது. உடனே, இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 ஆயிரத்து 775 குழந்தைகளுக்கு, 511 கோடியே 27 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம்.

    கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் என்று 2021-ல் ஆயிரத்து 148 குழந்தைகள் – 2022-ல் ஆயிரத்து 112 குழந்தைகள் – 2023-ல் ஆயிரத்து 12 குழந்தைகள் என்று, மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கினோம்.

    அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கின்ற ஆயிரத்து நானூறு பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம். இதென்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை .சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் இருக்கின்ற ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, அனைத்து சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும், தாய்ப்பால் வங்கியுடன் இணைத்திருக்கிறோம்.

    இப்படி ஏராளமான திட்டங்களை, முன்னெடுப்புகளை எங்களால் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இதற்கும் வாக்கரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும், கொள்கையும், செயல்திட்டமும், உழைப்பும், எங்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடுவதற்கான வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என்னுடைய கை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிதான், இருந்து கொண்டிருக்கிறது.

    பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள் என்று, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோம். பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக் கரங்கள் திட்டம்.

    இந்தத் திட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருப்பவரின் குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அவர்களுடைய குழந்தைகள் என்று கணக்கெடுக்கச் சொன்னோம்.

    அப்படி முதல்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம். உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வரவேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம். எங்களுடைய லட்சியம். இந்த லட்சியத்துக்கு துணையாகும் நம்முடைய திராவிட மாடல் அரசின் கரம்தான், அன்புக்கரம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!

    September 15, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

    September 15, 2025
    மாநிலம்

    மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    September 15, 2025
    மாநிலம்

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு

    September 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    September 15, 2025
    மாநிலம்

    “நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்” – விஜய் பிரச்சாரம் குறித்து சீமான் விமர்சனம்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!
    • நாள்பட்ட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறதா? இது மூளைக்கு ஒரு நேர வெடிகுண்டு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை
    • இதய ஆரோக்கியம்: உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.