Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
    மாநிலம்

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

    adminBy adminJuly 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்​பாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் இயக்​குந​ராக உள்ள நிறு​வனத்​துக்கு எதி​ராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து ரவிச்​சந்​திரன் மற்​றும் அவருக்கு சொந்​த​மான நிறு​வனங்களில் சோதனை மேற்​கொண்டது.

    இந்​நிலை​யில் எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்த சிபிஐ வழக்கை ரத்து செய்​யக்​கோரி என். ரவிச்​சந்​திரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரி்த்த நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, மனு​தா​ர​ரான ரவிச்சந்திரனுக்கு ரூ. 30 லட்​சம் அபராதம் விதித்​தும், அதில் ரூ. 15 லட்​சத்தை சிபிஐ-க்​கும், ரூ. 15 லட்​சத்தை சமரச தீர்வுமையத்துக்கும் செலுத்த வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன் சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்து உத்​தர​விட்​டார்.

    இந்​நிலை​யில் சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கு ரத்து செய்​யப்​பட்​ட​தால் அந்த வழக்​கின் அடிப்​படை​யில் பதி​யப்​பட்ட அமலாக்கத்துறை வழக்​கை​யும் ரத்து செய்​யக்​கோரி​யும், சோதனை​யின்​போது கைப்​பற்​றப்​பட்ட மின்​னணு சாதனங்​கள் மற்​றும் பணத்தை திருப்​பித்​தரக் கோரி என்.ரவிச்​சந்​திரன், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    இந்த வழக்கு நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடை​பெற்​றது. அப்​போது நீதிபதி​கள், ‘சிபிஐ பதிவு செய்​திருந்த மூல வழக்கு ரத்து செய்​யப்​பட்டு விட்​ட​தால், அந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்கத்துறை​யால் பதி​யப்​பட்ட இந்த வழக்​கை​யும் ரத்து செய்​கிறோம். பறி​முதல் செய்​யப்​பட்ட மி்ன்​னணு சாதனங்​கள் மற்றும் பணத்தை திருப்பி ஒப்​படைக்க வேண்​டும்​’ என உத்​தர​விட்​டுள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    July 26, 2025
    மாநிலம்

    முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    July 26, 2025
    மாநிலம்

    உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை கண்டனம்

    July 26, 2025
    மாநிலம்

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    July 26, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை: முத்தரசன்

    July 26, 2025
    மாநிலம்

    ‘தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்தவர்கள்’ – கார்கில் வெற்றி தினத்தில் முதல்வர் அஞ்சலி!

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
    • முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
    • ஒவ்வொரு மூத்த குழந்தை எதிர்கொள்ளும் 5 அமைதியான அழுத்தங்கள்
    • கனவு நிறைவேறுமா? – நாளை அப்துல் கலாமின் 10-வது நினைவு தினம்!
    • தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.