Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமைச்சராகி 50 நாளாச்சு… இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? – பிரேக் போடும் ரங்கசாமி… பேசாமல் இருக்கும் பாஜக!
    மாநிலம்

    அமைச்சராகி 50 நாளாச்சு… இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? – பிரேக் போடும் ரங்கசாமி… பேசாமல் இருக்கும் பாஜக!

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமைச்சராகி 50 நாளாச்சு… இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? – பிரேக் போடும் ரங்கசாமி… பேசாமல் இருக்கும் பாஜக!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில், முதல்வர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் வைத்துக்கொண்ட நிலையில், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டன.

    ​

    முதல்​வ​ராக 2021 மே 7-ல் ரங்​க​சாமி பொறுப்​பேற்ற நிலை​யில், அதன் பிறகு 50 நாட்​கள் கழித்து ஜூன் 27-ல் தான் மற்ற அமைச்​சர்​கள் பொறுப்​பேற்​ற​னர். பாஜக-​வில் முதலில் நமச்​சி​வாய​மும், சாய் ஜே.சர​வணன்​கு​மாரும் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றார்​கள்.

    இதையடுத்​து, பாஜக எம்​எல்​ஏ-​வான ஜான்குமாருக்கு அமைச்​சர் பதவி கிடைக்​காததைக் கண்​டித்து அவரது ஆதர​வாளர்​கள் பாஜக அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டனர். ஆனாலும், வேலை நடக்​க​வில்​லை. எனினும் ஜான்குமார் அமைச்​ச​ராகும் முயற்​சிகளை தொடர்ந்து கொண்டே இருந்​தார். இதனிடையே, அமைச்​சர் மற்​றும் வாரி​யத் தலை​வர் பதவி​களை எதிர்​பார்த்து ஏமாந்து போன பாஜக எம்​எல்​ஏ-க்​கள், சுயேச்​சைகள் சிலரை சேர்த்​துக் கொண்டு தனி அணி​யாக செயல்​பட்​டனர்.

    இந்த நிலை​யில், மக்​கள​வைத் தேர்​தல் தோல்​வியை அடுத்து அதிருப்தி எம்​எல்​ஏ-க்​களை திருப்​திப்​படுத்​து​வதற்​கான வேலை​களை முன்​னெடுத்​தது பாஜக டெல்லி தலை​மை. அதன் ஒரு பகு​தி​யாக, டெல்​லி​யின் உத்​தர​வால் பாஜக அமைச்​சர் சாய் ஜே.சர​வணன்​கு​மார் தனது பதவியை ஜூன் 27-ல் ராஜி​னாமா செய்​தார்.

    அவருக்​குப் பதிலாக, அதிருப்​தி​யில் இருந்த ஜான்குமார் அமைச்​சர​வைக்​குள் கொண்​டு​வரப்​பட்​டார். அமைச்​ச​ராக அறிவிக்​கப்​பட்ட பிறகும் 2 வார காத்​திருப்​புக்​குப் பிறகே ஜூலை 14-ல் அமைச்​ச​ராகப் பொறுப்​பேற்​றார் ஜான்குமார். ஆனபோதும், அவருக்கு துறை​கள் ஏதும் ஒதுக்​கப்​ப​டாத​தால் 50 நாட்​களைக் கடந்​தும் இலாகா இல்​லாத அமைச்​ச​ராகவே தொடர்​கி​றார் ஜான்​கு​மார்.

    இதுபற்றி புதுச்​சேரி சட்​டப்​பேரவை வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, “அமைச்​ச​ராக இருந்த சாய் ஜே.சர​வணன்​கு​மார், ஆதி​தி​ரா​விடர் நலன்,

    தீயணைப்​பு, சிறு​பான்​மை​யினர் நலன் உள்​ளிட்ட துறை​களை கவனித்து வந்​தார். ஆனால், ஜான்​கு​மாருக்கு அப்​படியே சாய் சரவணன் வைத்​திருந்த துறை​களை ஒதுக்​காமல் அவருக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த துறை​களை ஒதுக்க நினைக்​கிறது பாஜக தலை​மை.

    அப்​படி முக்​கிய துறை​களை அவருக்கு ஒதுக்​கி​னால், என்​.ஆர்​.​காங்​கிரஸ் அமைச்​சர்​களுக்​கும் இலாகா மாற்ற வேண்டி வரலாம். இல்​லா​விட்​டால் முதல்​வரே தன்​வசம் உள்ள சில துறை​களை விட்​டுக்​கொடுக்க வேண்டி இருக்​கும். ஆனால், ‘அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் வரப்​போவ​தால் இப்​போது கூட்​ட​ணிக்​குள் எந்​தக் குழப்​ப​மும் செய்ய வேண்​டாம். அப்​படி அவசி​யம் ஏற்​பட்​டால் பாஜக அமைச்​சர்​கள் வைத்​திருக்​கும் துறை​களுக்​குள்​ளேயே மாற்​றம் செய்து கொள்​ளுங்​கள்’ என முதல்​வர் தந்​திர​மாகச் சொல்​லி​விட்​டார். அதனால் ஜான்​கு​மாருக்கு இலாகா ஒதுக்​கு​வ​தில் சிக்​கல் நீடிக்​கிறது” என்​ற​னர்.

    இதுகுறித்து என்​.ஆர்​.​காங்​கிரஸ் வட்​டாரத்​தில் விசா​ரித்த போது, “இது​வரை இரண்டு முறை அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​திருக்​கி​றார் முதல்​வர் ரங்​க​சாமி. முதலில், என்​.ஆர்​.காங்​கிரஸ் அமைச்​ச​ராக இருந்த சந்​திர பிரி​யங்கா நீக்​கப்​பட்​டார். அதன் பிறகு ஐந்து மாதங்​கள் கழித்தே புதிய அமைச்​ச​ராக திரு​முரு​கன் பதவி​யேற்​றார். அவரும் இப்​படித்​தான் மாதக் கணக்​கில் இலாகா இல்​லாத அமைச்​ச​ராகவே வலம் வந்​தார். சொந்​தக் கட்​சிக்​கார​ரான திரு​முரு​க​னுக்கே 138 நாட்​கள் கழித்​துத்​தான் துறை​களை ஒதுக்​கி​னார் ரங்​க​சாமி. அப்​படிப்​பட்​ட​வர், பாஜக-வைச் சேர்ந்த ஜான்குமாருக்கு மட்​டும் கேட்​டதுமே பசை​யான துறை​களை கொடுத்து விடு​வா​ராக்​கும்” என்​ற​னர்

    புது​தாக அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்​கீடு செய்ய என்ன முயற்சி எடுத்​திருக்​கிறீர்​கள் என மாநில பாஜக தலை​வர் ராமலிங்​கத்​திடம் கேட்​டதற்​கு, “ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்​கு​வது தொடர்​பாக முதல்​வரிடம் கலந்​தாலோ​சித்து விரை​வில்​(?) அவருக்கு இலாகா ஒதுக்​கீடு செய்ய ஆவன செய்​வோம்” என்​றார்.

    புதி​தாக பொறுப்​பேற்ற பாஜக அமைச்​சருக்கு எப்​போது​தான் இலாகா ஒதுக்​கு​வீர்​கள் என முதல்​வர் ரங்​க​சாமி​யிடம் கேட்​டதற்​கு, “எப்​போது வேண்​டு​மா​னாலும் ஒதுக்​கப்​படும்” என்​று, வரும்​… ஆனா, வரா​து… ஸ்டைலிலேயே சொன்​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    September 18, 2025
    மாநிலம்

    டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 18, 2025
    மாநிலம்

    சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு

    September 18, 2025
    மாநிலம்

    கோவை விமான நிலையத்தில் ‘பயணிகள் சேவை விழா’வில் நடிகர் ரஜினிகாந்த்!

    September 17, 2025
    மாநிலம்

    “திமுகவுக்கு மாற்று…” – தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 17, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    • எளிய வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகளுடன் எடை இழப்புக்குப் பிறகு சருமத்தைத் தவிர்ப்பது எப்படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இனிமேல் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்
    • டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • குடித்த பிறகு போதைப்பொருள்: விரைவான மீட்புக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் குடிக்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.