Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

    adminBy adminAugust 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

    இதுதொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – அமெரிக்கா இடையே, இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கக்​கூடிய வர்த்தக ஒப்​பந்​தத்தை எட்​டு​வதற்கு மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள முயற்​சிகளை பாராட்​டு​கிறேன். தேசிய நலன்​களை பாது​காப்​ப​தற்​கான மத்​திய அரசின் நிலைப்​பாட்டை முழு​மை​யாக ஆதரிக்​கிறேன். அதே​நேரம், அமெரிக்​கா​வின் 25 சதவீத வரி​வி​திப்பு மற்​றும் அதன் தொடர்ச்​சி​யாக 50 சதவீத​மாக வரி அதி​கரிப்பு காரண​மாக கடும் தாக்​கங்​களை எதிர்​கொள்​வ​தால், தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள கவலை அளிக்​கும் பிரச்​சினை குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

    தமிழகத்தில் தாக்கம் அதிகம்: கடந்த நிதி ஆண்​டில், இந்​தி​யா​வின் மொத்த ஏற்​றும​தி​யான 433.6 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களில் 20 சதவீதம் அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், தமிழகத்​தின் 52.1 பில்​லியன் டாலர் பொருட்​களில் 31 சதவீதம் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகி​யுள்​ளது. இவ்​வாறு அமெரிக்க சந்​தையை தமிழகம் அதி​க​மாக சார்ந்​துள்​ள​தால், இந்​தி​யா​வில் மற்ற மாநிலங்​களை​விட தமிழகத்​தில் இந்த இறக்​குமதி வரி​யின் தாக்​கம் அதி​க​மாக இருக்​கும். இது தமிழக உற்​பத்தி துறை, வேலை​வாய்ப்​பில் கடும் பாதிப்பை ஏற்​படுத்​தும்.

    இந்த வரி விதிப்​பால், ஜவுளி, ஆடைகள், இயந்​திரங்​கள், ஆட்​டோமொபைல், நகைகள் – ரத்​தினக் கற்​கள், தோல், காலணி​கள், கடல் பொருட்​கள், ரசாயனம் ஆகிய துறை​களில் மிக​வும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த துறை​கள் அனைத்​தும் அதிக தொழிலா​ளர்​களை சார்ந்​தவை என்​பது இன்​னும் கவலைக்​குரியது. இதில் எந்த ஒரு ஏற்​றுமதி மந்த நிலை​யும் விரை​வாக பெரு​மளவி​லான பணி இழப்​பு​களுக்கு வழி​வகுக்​கும். கடந்த 2024-25-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் ஜவுளி ஏற்​றும​தி​யில் தமிழகம் 28 சதவீதம் அளவுக்கு பங்​களித்​தது. இது நாட்​டின் மற்ற மாநிலங்​களை​விட மிக​வும் அதி​கம்.

    வேலை இழக்கும் அபாயம்: குறிப்​பாக, தமிழகத்​தில் ஜவுளித் துறை 75 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு அளித்​துள்​ளது. இந்த சூழலில், தற்​போது 25 சதவீத வரி மற்​றும் முன்​மொழியப்​பட்​டுள்ள 50 சதவீத வரி​யின் காரண​மாக, 30 லட்​சம் பேர் வேலை இழக்​கும் அபா​யம் உள்​ளது. இந்த நெருக்​கடியை தணிக்க, நமது ஏற்​றுமதி போட்​டித் தன்​மைக்கு நீண்​ட​கால​மாக தடை​யாக உள்ள கட்​டமைப்பு சிக்​கல்​களை தீர்ப்​பது அவசி​யம். இதுதொடர்​பாக, பாதிக்​கப்​பட்ட துறை​களைச் சேர்ந்த தொழில் அமைப்​பு​களு​டன் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினேன். அதன் அடிப்​படை​யில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்​சங்​களில், அதாவது, மனித​னால் உரு​வாக்​கப்​பட்ட இழை மதிப்பு சங்​கி​லிக்​கான ஜிஎஸ்டி விகிதங்​களில் உள்ள முரண்​பாடு​களை நீக்​கி, தலைகீழ் வரி கட்​டமைப்பை சரிசெய்ய வேண்​டும். முழு சங்​கி​லியை​யும் 5 சதவீத ஜிஎஸ்டி அடுக்​குக்​குள் கொண்டு வரு​வது மற்​றும் அனைத்து வகை​யான பருத்​திக்​கும் இறக்​குமதி வரி​யில் இருந்து விலக்கு அளிப்​பது ஆகிய​வற்​றில் துரித நடவடிக்கை தேவைப்​படு​கிறது.

    மேலும், அவசர கடன் வரி உத்​தர​வாத திட்​டத்​தின்​கீழ் (ECLGS) 30 சதவீதம் பிணை​யில்லா கடன்​களை 5 சதவீத வட்டி மானி​யம் மற்​றும் அசலை திருப்பி செலுத்​து​வ​தில் 2 ஆண்டு தற்​காலிக தடை​யுடன் நீட்​டித்​தல், ஏற்​றுமதி பொருட்​கள் மீதான தீர்​வை​கள், வரி​களை நீக்​குதல் (RoDTEP) திட்​டத்​தின் பயன்​களை 5 சதவீத​மாக உயர்த்​துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளிப் பொருள் ஏற்​றும​திக்​கும் முன் மற்​றும் பின்​கடனை நீட்​டித்​தல் ஆகியவை நமது ஏற்​றுமதி போட்​டித் தன்​மையை வலுப்​படுத்​து​வதற்​கான பிற முக்​கிய​மான காரணி​களாக முன்​னிலைப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

    உலகளா​விய வர்த்​தகத்​தில் சுங்​கவரி தாக்​கங்​கள், போட்டி அழுத்​தங்​கள் காரண​மாக, மற்ற துறை​களும் இதே​போன்ற சவால்​களை எதிர்​கொள்​கின்​றன. அதற்கு உடனடி நிவாரணம் வழங்​கி, பணப் புழக்​கத்தை மேம்​படுத்​த​வும், செல​வுச் சுமை​களைக் குறைக்​க​வும் சுங்க வரி​களால் பாதிக்​கப்​பட்ட அனைத்து ஏற்​றும​தி​யாளர்​களுக்​கும் சிறப்பு வட்டி மானி​யத் திட்​டம் அறி​முகம், அதிக சுங்க வரி சந்தை அபா​யங்​களை ஈடு​கட்ட, தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள் (FTA) மற்​றும் இருதரப்பு ஒப்​பந்​தங்​களை விரைவுபடுத்​துதல் ஆகிய​வற்றை மத்​திய அரசு பரிசீலிக்க வேண்​டும்.

    இந்த பிரச்​சினை​யின் தீவிரத்தை கருத்​தில் கொண்​டு, கரோனா காலத்​தில் செயல்​படுத்​தப்​பட்​டது​போல, அசலை திருப்​பிச் செலுத்​து​வ​தில் சலுகை உள்​ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்​புடன் நமது ஏற்​றும​தி​யாளர்​களை ஆதரிக்க வேண்​டியது மிகவும் அவசி​யம். பிரேசில் அரசு அந்​நாட்டு ஏற்​றும​தி​யாளர்​களுக்கு வரி தள்​ளிவைப்பு மற்​றும் வரிச் சலுகைகளை அறி​வித்​துள்​ளது. இதுபோன்ற முயற்​சியை இந்​தி​யா​விலும் நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். இதுவரை காணாத நெருக்கடி தமிழகத்​தின் வலு​வான உற்​பத்தி துறை, இது​வரை கண்​டி​ராத ஒரு நெருக்​கடியை தற்​போது எதிர்​கொள்​கிறது. பல்​வேறு துறை​களில் லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது.

    எனவே, தாங்​கள் இந்த விஷ​யத்​தில் அவசர​மாக தலை​யிட்​டு, சம்​பந்​தப்​பட்டஅமைச்​சகங்​கள் மற்​றும் தொழில் துறை​யினருடன் கலந்​துபேச வேண்​டும். இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​டெடுக்​க​வும் மத்​திய அரசு மேற்​கொள்​ளும் அனைத்து நடவடிக்​கைகளுக்​கும் தமிழகம்​ முழு ஒத்​துழைப்​பு வழங்​கும்​. இவ்​வாறு கடிதத்​தில்​ முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு

    August 17, 2025
    மாநிலம்

    கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

    August 17, 2025
    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்

    August 17, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவையில் இன்று கனமழை

    August 17, 2025
    மாநிலம்

    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

    August 17, 2025
    மாநிலம்

    தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை!

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு
    • கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
    • சக்கர நாற்காலி கட்டுப்பட்ட பெண் மீண்டும் காலில் இறங்குகிறாள்; இந்த உணவு அவளுக்கு உதவியது என்று கூறுகிறது – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ சேவை
    • அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.