Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    மாநிலம்

    அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதில் பாஜகவின் பங்கு இருக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுகவினர் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சியெல்லாம் இல்லை என கூறி வருகின்றனர். எனவே, கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என்ற தெளிவு இல்லாமல் அதிமுக – பாஜகவினரிடையே தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

    சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் அதிமுக தலைமையின்கீழ் கூட்டணி ஆட்சி என பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவினரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என கூறுகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த நேர்காணலில், ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு நிச்சயம் இருக்கும்,’ என கூறியிருந்தார். மேலும், கூட்டணியின் முதல்வர் குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இருந்தே ஒருவர் முதல்வர் என குறிப்பிட்டிருந்தார். பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்துவிட்டார்.

    அமித் ஷாவின் இந்த கருத்துக்கள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில், அதிமுக- பாஜகவை சேர்ந்த தலைவர்கள், கூட்டணி குறித்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது, தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வைப்பதிலும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதிலும் பாஜகவின் பங்கு இருக்க போகிறதா அல்லது தேர்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்படும் ஆட்சியில் பங்கு இருக்க போகிறதா என்பதே அந்த குழப்பம்.

    இந்நிலையில், அமித் ஷா தெரிவித்த கருத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, ‘இதுகுறித்து அமித் ஷாவும்,பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். அமித் ஷா கூட்டணி அறிவித்த போதே, பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என தெளிவாக கூறிவிட்டார்’ என்றார்.

    முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கூறும்போது, ‘தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆட்சி அமைப்பது யார், முதல்வராக வேட்பாளர் யார் என்பதை ஏற்கெனவே பழனிசாமியை அருகில் வைத்தே அமித் ஷா தெளிவுப்படுத்தியிருக்கிறார். எனவே, பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்.

    தற்போது அமித் ஷா கூறிய வார்த்தைகளை வைத்து கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில் பாஜகவும் அங்கமாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக அமித் ஷா கூறியுள்ளார்’ என்றார்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறுகையில், ‘இதற்கான விளக்கத்தை பொதுச்செயலாளர் தான் சொல்ல வேண்டும். பொது எதிரியான திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும். இந்த கருத்தை ஒருமித்த கருத்தாக ஏற்படுத்தி, இந்த கருத்துக்கு யாரெல்லாம் இசைவு தெரிவிக்கிறார்களோ, அவர்களை அழைத்து கூட்டணி அமைக்கப்படும்.

    அவர்களோடு கூட்டணி அமைப்பதோடு சரி. கூட்டணி அரசு என்பது இதுவரை தமிழகத்தில் அமைந்ததாக சரித்திரம் இல்லை. பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது என அமித் ஷா தெரிவித்துள்ளார். அப்படியெனில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதானே’ என்றார். இவ்வாறு, அடுத்தகட்ட நிர்வாகிகள் பல்வேறு வகையான விளக்கங்களை அளித்தாலும், அதிமுக, பாஜகவின் கீழ் நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இந்த விளக்கங்கள் சார்ந்த குழப்ப நிலை நீடிக்கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயர் கல்வித் துறையில் ரூ.51.04 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள் திறப்பு

    August 26, 2025
    மாநிலம்

    தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு

    August 26, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் ரூ.174 கோடியில் 19 புதிய ஐடிஐக்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    August 26, 2025
    மாநிலம்

    மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    August 26, 2025
    மாநிலம்

    நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தல்

    August 26, 2025
    மாநிலம்

    அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி ஆணைகள் வழங்கல்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் கல்வித் துறையில் ரூ.51.04 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள் திறப்பு
    • உங்கள் பழைய சேலை-ப்ளூஸை புத்தம் புதியதாக மாற்ற 5 அழகான வழிகள்
    • பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்
    • தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு
    • இரத்த சர்க்கரையை நிர்வகிக்க பீட்ரூட் சாறு உதவ முடியுமா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.