Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அமித் ஷாவின் பேச்சு புரியாதவர்களே கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” – கே.பி.ராமலிங்கம்
    மாநிலம்

    “அமித் ஷாவின் பேச்சு புரியாதவர்களே கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” – கே.பி.ராமலிங்கம்

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அமித் ஷாவின் பேச்சு புரியாதவர்களே கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” – கே.பி.ராமலிங்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாமக்கல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி பேச்சு புரியாதவர்கள், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக பல கருத்துகளைக் கூறி வருகின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்துக்கு பின்னர் பி.தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலுக்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை முதல்வர் நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி ஆளும் திமுக அரசு கவலைப்படவில்லை. இனி எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

    அதிமுக பொதுச் செயலாளரின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கிடைக்கும் வரவேற்பு, பாஜக கூட்டணி ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல் முதல்வர் ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்” என்றார்.

    தொடர்ந்து, கே.பி.ராமலிங்கம் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும் என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆட்சி அமைப்பார் என்பதை அவர் தெளிவாக கூறியிருந்தார். அவரது இந்தி மொழி பேச்சு புரியாதவர்கள் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    மேலும் பல கட்சிகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வர உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எனது நண்பர், அவரைச் சந்தித்துப் பேச உள்ளேன். எந்தக் கட்சியும் தலித் சமுதாய மக்களுக்கு உரிமைகள், வாய்ப்புகள் வசதிகள், அமைச்சரவையில் இடமும் வழங்காத நிலையில், பாஜக தலித் மக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்கி உள்ளது. பாமக ஏற்கெனவே பாஜக கூட்டணியில்தான் உள்ளது என்பதை அக்கட்சியின் தலைமை தெரிவித்து விட்டது. இது தொடர்பாக பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை” என்று அவர் கூறினார்.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜக மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஷ்குமார், செந்தில்நாதன் (கரூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    July 17, 2025
    மாநிலம்

    எம்.பி. பதவி: கமல்ஹாசனை வாழ்த்தி ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு

    July 17, 2025
    மாநிலம்

    இடைத்தரகரின்றி விவசாயிகளுக்கு நேரடியாக நலத் திட்ட உதவிகள்: எடப்பாடி பழனிசாமி உறுதி

    July 17, 2025
    மாநிலம்

    சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு: நடவடிக்கை கோரும் லாரி உரிமையாளர்கள்

    July 17, 2025
    மாநிலம்

    சிக்னல் கோளாறால் மின்சார ரயில் சேவை பாதிப்பு: விம்கோ நகரில் பயணிகள் போராட்டம்

    July 16, 2025
    மாநிலம்

    ‘ஆட்சியில் பங்கு’ – அன்புமணி கருத்தும், ராமதாஸ் விளக்கமும்

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    • செருப்பு சர்ச்சைக்குப் பிறகு கோலாப்பூருக்கு நட்பு வருகையுடன் பிராடா திருத்த முயற்சிக்கிறாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 8-ம் வகுப்பு தனித்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
    • எம்சிசி முருகப்பா ஹாக்கி: கடற்படை அணி வெற்றி!
    • எம்.பி. பதவி: கமல்ஹாசனை வாழ்த்தி ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.