Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘அமித் ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது’ – டிடிவி.தினகரன்
    மாநிலம்

    ‘அமித் ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது’ – டிடிவி.தினகரன்

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அமித் ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது’ – டிடிவி.தினகரன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருவது முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

    அதன்பின் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரணியில் திரண்டு வருகிறோம். ஊகங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். மதுரைக்கு வந்த முதல்வரால் இந்த நகருக்கு என்ன நடந்தது?’ இந்த ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம். சாக்கடை கால்வாயை துணியை வைத்து மூடியது தான் மிச்சம்.

    முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததைப் பார்த்தேன். கருணாநிதி காலத்திலேயே தொடர்ந்து 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்தது. பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்து கொண்டார்கள். 2026-ம் ஆண்டில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    அமித்ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை முறை அமித்ஷா தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறுவது அவரது பயத்தின் வெளிப்பாடு. ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் பலமுறை உறுதி செய்துவிட்டார். அவருக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்.

    அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவரின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும். எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! – இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

    September 14, 2025
    மாநிலம்

    விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!

    September 14, 2025
    மாநிலம்

    இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

    September 14, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    September 14, 2025
    மாநிலம்

    இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரீஃப் முதல் அவுட்பேக் வரை: 5 ஆஸ்திரேலிய சாகசங்கள் தவிர்க்கப்படக்கூடாது
    • மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்
    • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
    • 100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ பாடல்!
    • இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! – இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.