Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
    மாநிலம்

    அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார்.

    கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

    இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

    சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், 6 நிபந்தனைகளுடன் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது. அந்தவகையில், ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 3 மோசடி வழக்குகள் தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும் என அந்த நிபந்தனைகளில் கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒரு நாள் இடைவெளியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.

    இதன்தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அமைச்சர் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக செந்தில் பாலாஜி திங்கட்கிழமையான நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்திட்டு சென்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு

    August 25, 2025
    மாநிலம்

    போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்: சிஐடியு தொழிற்சங்கம் அறிவிப்பு

    August 25, 2025
    மாநிலம்

    தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் தீவிரமடையும் உட்கட்சி பிரச்சினைகள்: நிர்வாகிகள் குமுறல்

    August 25, 2025
    மாநிலம்

    மக்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது: பழனிசாமி குற்றச்சாட்டு

    August 25, 2025
    மாநிலம்

    அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம்: ஐகோர்ட்

    August 25, 2025
    மாநிலம்

    தன்கரை வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன்? – திருமாவளவன் கேள்வி

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறந்த தூக்கத்திற்கான தேதிகள் மற்றும் பூசணி விதைகள்: ஊட்டச்சத்து நிபுணர் ஆழமான, அமைதியான இரவுகளுக்கான மெக்னீசியம் நிறைந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
    • தெலுங்கில் அறிமுகமாகிறார் ரவீணா டாண்டன் மகள்!
    • ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு
    • இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள்: புறக்கணிக்கப்படக்கூடாது என்று இன்சுலின் எதிர்ப்பின் 5 மறைக்கப்பட்ட அறிகுறிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.