Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து
    மாநிலம்

    அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச்சலத்தின் 18-வது ஆண்டு நினைவு கருத்தரங்கம் பிவிபி அறக்கட்டளை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

    ‘ஆணவக் கொலைகளும், சாதியை அழித்தொழித்தலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

    சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும், பின்பும் நீதிமன்றங்கள் ஆதிக்க சாதியை சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழகத்தில் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

    அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாக பயிற்சி பெற்ற பிறகும் அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. சாதிய ஒழிப்புக்கு எதிரான இந்த சட்டப் போராட்டத்தில்பிவிபி போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

    உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: சாதியக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனினும், அதுமட்டுமே சாதியக் கொலைகள், சாதியை ஒழி்த்துவிடாது.

    சாதி ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் ரமணி்: சாதியக் கொலைகள் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து களஆய்வு நடத்தியுள்ளோம். ஆனாலும், சாதியக் கொலைகளை தடுக்க யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை.

    சமூக செயற்பாட்டாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா: சமூகத்தில் சாதியக் கொலைகள், அத்துமீறல்களை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்கு சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.

    அந்த வகையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து பலரை சட்டம் படிக்க வைத்து, வழக்கறிஞர்களாக உருவாக்கும் முயற்சியில் பிவிபி அறக்கட்டளை தனது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். பிவிபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பி.வி.வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் பேசினர். முன்னதாக, ஜெயந்தி வரவேற்றார். பி.எஸ்.கீதா நன்றி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    2 சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

    October 6, 2025
    மாநிலம்

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    October 6, 2025
    மாநிலம்

    பெரியாருக்கு துரோகம் செய்யவில்லை: ஆ.ராசாவுக்கு வீரபாண்டியன் பதில் 

    October 6, 2025
    மாநிலம்

    சென்னை | ரோந்து பணி சென்றபோது போலீஸ் எஸ்ஐ-யை கடித்த நாய்

    October 6, 2025
    மாநிலம்

    ‘பசிக்கு சோறு கேட்கிறார்… பந்திக்கு தாமதமாக வருகிறார்…’ – காங்கிரஸை கலாய்க்கும் கழக கண்மணிகள்

    October 6, 2025
    மாநிலம்

    வீட்டு இணைப்புக்கு ரூ.8 லட்சம் மின் கட்டணம்: குடும்பத்தினருக்கு ‘ஷாக்’ கொடுத்த மின்வாரியம்

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    • 2 சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
    • கார்வா ச uth த் ஸ்கின்கேர் உதவிக்குறிப்புகள்: அந்த இறுதி திருமண பளபளைக்கு கார்வா ச uth துக்கு 5 நாட்களுக்கு முன்பு செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
    • எலோன் மஸ்க் கியூஆர் குறியீடுகளை ஸ்லாம்ஸ் செய்கிறார்: “நான் அவர்களை ஒரு கண்பார்வையாக வெறுக்கிறேன்” – அவரது விரக்தியின் பின்னணியில் இருப்பதற்கான காரணம் தொடர்புபடுத்தப்படலாம் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை: உ.பி துணை முதல்வர் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.