Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்
    மாநிலம்

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

    ஆண்​டு​தோறும் குடியரசு தினம், சுதந்​திர தினம், காந்தி ஜெயந்தி உள்​ளிட்ட 6 முக்​கிய நாட்​களில் தமிழகத்​தில் உள்ள 12,482 கிராம ஊராட்​சிகளில் கிராமசபை கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இக்​கூட்​டங்​களின் வாயி​லாக, பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​படும்.

    அந்த வகை​யில், வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று மாநிலம் முழு​வதும் கிராமசபைக் கூட்​டம் நடத்​து​வது தொடர்​பாக ஊரக வளர்ச்​சித்​துறை ஆணை​யர் பொன்​னை​யா, மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறிருப்​ப​தாவது: க.15ம் தேதி சுதந்​திர தினத்​தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்​டங்​கள் நடத்​தப்பட வேண்​டும். மக்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் வகை​யில் இடம், நேரத்தை அவர்​களுக்கு முன்​னரே தெரிவிக்க வேண்​டும். மதச்​சார்​புள்ள எந்த இடத்​தி​லும் கூட்​டம் நடத்​தப்​படக் கூடாது. கடந்த 2024 ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையி​லான காலத்​தில் கிராம ஊராட்​சி​யின் பொது நிதி​யில் இருந்து மேற்​கொள்​ளப்​பட்ட செல​வு​கள் குறித்த அறிக்கை கூட்​டத்​தில் படிக்​கப்​பட்டு ஒப்​புதல் பெறப்பட வேண்​டும்.

    சுத்​த​மான குடிநீர் விநியோகம், வரி செலுத்​தும் சேவை, இணைய வழி மனைப்​பிரிவு, கட்​டிட அனு​ம​தி​கள், சுய சான்று அடிப்​படை​யில் குடி​யிருப்​புக் கட்​டிடங்​களுக்கு உடனடி பதிவு மூலம் அனு​ம​தி​யளித்​தல் உள்​ளிட்​டவை குறித்து கூட்​டத்​தில் விவா​திக்க வேண்​டும். கிராமப் பகு​தி​களில் ஒற்​றைச்​சாளர முறை​யில் சுய சான்றை அடிப்​படை​யாக கொண்டு கட்​டிட அனு​மதி பெறும் வகை​யில் ஒருங்​கிணைக்​கப்​பட்ட நடை​முறை தமிழக அரசால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி, 2,500 சதுரஅடிக்கு குறை​வான மனைப் பரப்​பில் 3,500 சதுரஅடி வரை தரைத்​தளம் அல்​லது தரை மற்​றும் முதல் தளம் கொண்ட 2 குடி​யிருப்பு வரை உள்ள குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்கு ஒற்​றைச்​சாளர முறை​யில் சுய சான்​றின் அடிப்​படை​யில் அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இதுகுறித்து கிராம சபை கூட்​டத்​தில் தெரிவிக்க வேண்​டும்.

    மேலும், தமிழ்​நாடு எளிமைப்​படுத்​தப்​பட்ட ஊராட்சி கணக்​கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டம், தூய்மை பாரத இயக்​கம், ஜல்​ஜீவன் திட்​டம் உள்​ளிட்​டவை தொடர்​பாக​வும், பள்​ளி​கள், அங்​கன்​வாடி மையங்​கள், அரசு பொதுக் கட்​டிடங்​கள் அனைத்​தி​லும் குழாய் இணைப்​பு​கள் மூலம் தூய்​மை​யான குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படு​வதை உறுதி செய்​வது உள்​ளிட்​டவை குறித்​தும் விரி​வாக ஆலோ​சிக்​கப்பட வேண்​டும்.இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அனைத்து கிராம ஊராட்​சிகளி​லும் வரும் 15-ம் தேதி கிராமசபைக் கூட்​டம் நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பழநி அருகே ரேக்ளா பந்​தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்

    August 11, 2025
    மாநிலம்

    மேட்​டூர் அணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடி​யாக சரிவு

    August 11, 2025
    மாநிலம்

    தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்​னணி மாநில தலை​வர் தகவல்

    August 11, 2025
    மாநிலம்

    10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு

    August 11, 2025
    மாநிலம்

    தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 11, 2025
    மாநிலம்

    சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி
    • ‘தி இன்டர்ன்’ பட ரீமேக்: தீபிகா படுகோன் புது முடிவு
    • பழநி அருகே ரேக்ளா பந்​தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்
    • கொலஸ்ட்ரால் அல்லது இரத்த அழுத்தம் அலாரங்களை உயர்த்துவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இதய சிக்கல் தொடங்கலாம்: அதை அடையாளம் காண்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நக்சலலைட்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.