Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்
    மாநிலம்

    அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வண்டலூர்: ​காவல் துறை​யில் பெண்​கள் என்ற தலைப்​பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊன​மாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார். இன்று நடக்​கும் மாநாட்டு நிறைவு விழா​வில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொள்​கிறார்.

    பெண் காவலர்​களை கவுரவிக்​கும் வகை​யில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்​கியது செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அருகே உள்ள ஊன​மாஞ்​சேரி​யில் அமைந்​துள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நடந்​தது. மாநாட்டின் கருப்​பொருள் ‘பெண் காவல்​துறை மற்​றும் அதி​காரமளித்​தல்’ என்ற கரும்​பொருளு​டன் நடை​பெற்ற மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார்.

    அப்​போது அவர் பேசி​யது:- தமிழகத்​தில் காவல்​துறை​யில் பெண்​களை முதன்​முதலாக தமிழ்​நாடு அறி​முகப்​படுத்​தி​யது. பெண்​களை காவல் துறை​யில் சேர்த்து 50 ஆண்​டு​கள் கடந்து விட்​டது. மாநாட்​டில் இருந்து எழும் பரிந்​துரைகளுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்​களும் செயல்பட வேண்​டும்.

    காவல்​துறை​யில் பெண்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிப்​ப​தால் காவல்​துறை பற்​றிய பொது​மக்​களின் பார்​வையை மாற்​று​வதோடு மட்​டுமல்​லாமல், காவல்​துறையின் செயல்​பாடு​களும் மேம்படும். பெண் காவலர்​களுக்கு அவர்​களின் பணி​யிடத்​தில் அடிப்​படை வசதி​கள் வழங்​கப்பட வேண்​டும். காவல் பணி​யிலும், குடும்​பத்​தி​லும் பெண்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர். நாட்​டில் உள்ள அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் பெண்​களுக்கு என தனி​யாக உதவி மையம் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது இவ்​வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்​சி​யில் தமிழக காவல்​துறை இயக்​குநர் சங்​கர் ஜிவால், காவல் ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டு பணி​யகத்​தின் (BPR&D) இயக்​குநர் ராஜீவ் குமார் ஷர்​மா, தமிழ்நாடு காவல் உயர்​ப​யிற்​சி​யகத்​தின் இயக்​குநர் டாக்​டர் சந்​தீப் ராய் ரத்​தோர், பொருளா​தார குற்​றப் பிரிவு, கூடு​தல் இயக்​குநர் பால நாகதேவி உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர். இறு​தி​யில் இணை அமைச்​சர் தேசிய மாநாட்​டின் கண்​காட்​சியை தொடங்கி வைத்​தார்.

    இன்று நிறைவு விழா​: தமிழ்​நாட்​டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதி​காரிகளும் இந்த ​மா​நாட்​டில்​ கலந்​து கொண்​டனர்​. இன்​று நடக்​கும்​ ​மா​நாட்​டு நிறைவு விழா​வில்​ தமிழக துணை முதல்​வர்​ உதயநி​தி ஸ்​டா​லின்​ கலந்​து கொள்​கிறார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் தரிசனம்!

    July 12, 2025
    மாநிலம்

    ‘திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது’ – சென்னை காவல் ஆணையர்

    July 12, 2025
    மாநிலம்

    தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    July 12, 2025
    மாநிலம்

    அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

    July 12, 2025
    மாநிலம்

    மதுரை, கோவை, சேலம் மாவட்டங்களில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.64 கோடியில் பணிகள் தொடக்கம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

    July 12, 2025
    மாநிலம்

    சென்னை | ஜூலை 15, 17 தேதிகளில் 27 மின்சார ரயில் சேவையில் மாற்றம்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்த இரத்த பரிசோதனை மாரடைப்பு அபாயத்தை கணிக்க முடியும், மேலும் இது கொழுப்பு அல்ல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம்: விமான போக்குவரத்து அமைச்சர்
    • திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் தரிசனம்!
    • புதுச்சேரியில் ரூ.18,000-க்கு விற்ற புலாசா மீன்!
    • இந்த இயற்கை வழிகளில் பருவமழை உடல்நல அபாயங்கள் மற்றும் ஈரப்பதத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.