Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா
    மாநிலம்

    ‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா

    adminBy adminAugust 18, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சசிகலா கூறியுள்ளார்.

    சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

    2020-ல் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். 2021 தேர்தல் அறிக்கையிலும் தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிப்படி நீங்கள் நடந்து கொண்டீர்களா? என முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

    திமுக அரசுக்கு எத்தனை துறைகள் உள்ளன, எத்தனை செயலர்கள் உள்ளனர், அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை. தெரியாமல் வந்து ஆட்சியில் அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர்.

    விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறது. நான் ஆட்சிக்கு வர விட மாட்டேன். நான் கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களை பார்க்கவே எனக்கு கஷ்டமாக உள்ளது.

    ரேஷன் கடைக்கு வந்தால் பொருட்களே இருப்பதில்லை. இதை மறைப்பதற்காக வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை கொடுக்கிறோம் என்ற திட்டத்தை அரசு அறிவிக்கிறது. இது செய்ய முடியாத திட்டம். இதை செய்வேன் என செயல்படுத்துகின்றனர். ஏமாற்றியே ஆட்சி காலத்தை கழிக்கலாம் என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

    காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று அறிவித்தனர். அதையும் செய்யவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்து அரசு சிந்திப்பதே இல்லை. பின்னர் மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் 66,000 கி.மீ. புறவழிச் சாலைகள் உள்ளன. அதில் வண்டலூர் -மீஞ்சூர் புறவழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்களிடமிருந்து எவ்வளவு பணத்தை தான் நீங்கள் வாங்குவீர்கள். மக்கள் அரசாங்கத்தை உங்கள் கையில் கொடுத்த நாள் முதல் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை இதற்காகவா மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதற்காகவா.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. மது கடைகளாக திறந்து வருகின்றன. அதனால் இந்த ஆட்சியை கீழே இறக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வேன். நிச்சயம் ஆட்சிக்கு வர விடமாட்டோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தென்னாப்பிரிக்கா போன்று ஆகிவிடும்.

    ஜெயலலிதா இருக்கும்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. 2015 -16 காலகட்டத்தில் அதிகப்படியான மின் உற்பத்தியை வெளியில் விற்று இருக்கிறோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர மக்களே விட மாட்டார்கள்.

    ஸ்டாலினின் மகன் கார் ரேஸ் நடத்துவதற்காக ரூ.200 கோடி செலவிடுகிறார். இவரால் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன் கட்ட முடியாதா. வேண்டுமென்றே கட்டாமல் மழையில் நனையச் செய்கின்றனர். மத்திய அரசு உதவியுடன் குடோன்களை கட்டலாம். அதெல்லாம் மக்களின் மீது உண்மையான அன்பு வைத்தவர்கள் மட்டுமே செய்ய முடியும்.

    ஜெயலலிதா ஆட்சியில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மிகவும் குறைவு. அந்தந்த துறை செயலாளர்களை அனுப்பி உரிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருவார். திமுக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழியை போட்டு, அரசு நடத்தாமல் அரசியல் செய்கின்றனர். ஸ்டாலின் தொடர்ந்து கட்சி தலைவராக செயல்படுகிறார். முதல்வராக செயல்படவில்லை.

    அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.

    ஜெயலலிதா ஒரு நாளும் ரோடு ஷோ சென்று கை கொடுத்துக் கொண்டு சென்றதே கிடையாது. அது முதல்வரின் வேலை இல்லை. நீங்கள் நிர்வாகத்தை பார்க்க வேண்டும், உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்.

    மத்திய அரசை திட்டுவதும், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுவதும் தான் திமுக அரசின் வேலையாக உள்ளது. 2026-ல் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சி வரும். அந்த திறமை எங்களிடம் உள்ளது. திமுக அரசை மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். திமுக ஆட்சியில் கவுன்சிலர், எம்எல்ஏக்கள் அராஜகம் தான் நடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் அப்படி நடக்குமா. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இல.கணேசனுக்கு புகழஞ்சலி: முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு

    August 18, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அதிமுக அடக்கி வாசிக்கிறதா? – சந்தேகம் வலுப்பதன் பின்னணி

    August 18, 2025
    மாநிலம்

    தவெக கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

    August 18, 2025
    மாநிலம்

    ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

    August 18, 2025
    மாநிலம்

    தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

    August 18, 2025
    மாநிலம்

    சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மிடில் ஓவர்களில் பிரமாதமாக ஆடுவது ஸ்ரேயஸ் அய்யர்தான் – ஆகாஷ் சோப்ரா
    • சினிமா எடுப்பதில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டதாக நினைத்தது தவறு: ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்
    • இல.கணேசனுக்கு புகழஞ்சலி: முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு
    • மிகவும் ஆரோக்கியமாக இருப்பது ஆரோக்கியமற்றதாக மாறும் போது: 3 உங்கள் உடலை நீண்ட காலத்திற்கு சேதப்படுத்தும் தினசரி பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “விமர்சகர்களுக்கு பணம் இல்லை” – அனுபமா பரமேஸ்வரன் பேச்சு வைரல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.