Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு
    மாநிலம்

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​படும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.

    அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் தலை​மைக் கழக செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் தலை​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் உள்ள ஒய்​எம்​சிஏ அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

    இதில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கிவரும் நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. இக்​கூட்​டத்​தில் முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசும்​போது, “மதுரை மாநாட்​டில் தொண்​டர்​கள் எதிர்​பார்க்​கும் முடிவை அறி​விப்​போம். கட்சி நிர்​வாகி​கள் யாரும் எதிரணி​யினரை விமர்​சிப்​பதை தவிர்க்க வேண்​டும்” என்​றார்.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநிலம் தழு​விய மாநாடு நடத்​தப்​படும். அதில் பல முக்​கிய கொள்கை முடிவு​கள் எடுக்​கப்​படும். அது வெற்றி மாநா​டாக​வும், அதி​முக தொண்​டர்​கள் அனை​வரும் இணை​யும் மாநா​டாக​வும் இருக்​கும். மதுரை மாநாட்​டுக்கு தினகரன் மற்​றும் சசிகலா​வுக்கு அழைப்பு விடுக்​கப்​படும்.

    எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் விசு​வாசமிக்க தொண்​டர்​களை ஒருங்​கிணைப்​பது​தான் எங்​கள் கொள்​கை, அதில் வெற்றி பெறு​வோம். திமுக ஆட்​சியை துடைத்து எறிய அனை​வரும் ஒருங்​கிணைய வேண்​டும் என மக்​கள் நினைக்​கின்​றனர். விஜய்க்கு எப்​போதும் எங்​கள் ஆதரவு இருக்​கும். தற்​போது வரை அவர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    புதுக்​கட்சி தொடங்​கு​வீர்​களா, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறீர்​களா, அதி​முகவை பாஜக விழுங்கி விடுமோ என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, ‘‘எங்​களைப் பொறுத்​தவரை அதி​முக​தான் உயிர் நாடி இயக்​கம். சட்​டப்​போ​ராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. அதில் தொண்​டர்​கள் வெற்றி பெறு​வார்​கள்.

    சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் உள்​ளன. எதிர்​காலத்​தில் என்ன வேண்​டு​மா​னாலும் நடக்​கலாம். அதி​முக வரலாற்றை எடுத்து பார்த்​தால் எத்​தனையோ முதலைகள் விழுங்க பார்த்​துள்​ளன. ஆனால் அது நடை​பெற​வில்​லை. அதி​முக எப்​போதும் மக்​கள் கட்​சி’’ என்​றார்.

    முன்​ன​தாக பேசிய பண்​ருட்டி ராமச்​சந்​திரன் பேசும்​போது, “ஓ.பன்​னீர்​செல்​வம் யார் பின்​னாலும் செல்​லப் போவது இல்​லை. யாரை​யும் எதிர்​பார்த்து அரசி​யல் நடத்த போவ​தில்​லை. 2026 சட்​டப்​ பேர​வைத் தேர்​தல் எந்த வகை​யில் இருக்​கும் என்​பது குறித்து மாநாட்​டில் அறிவிக்​கப்​படும்” என்​றார். இக்​கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர்​கள் ஆர்​.​வைத்​திலிங்​கம், வெல்​லமண்டி நடராஜன், மனோஜ் பாண்​டியன்​ எம்​எல்​ஏ, தர்​மர்​ எம்​.பி உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    July 16, 2025
    மாநிலம்

    வீடுவீடாக கதவை தட்டுவதில் எங்களுக்கு கவுரவ குறைச்சல் இல்லை: பழனிசாமிக்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் பதில்

    July 16, 2025
    மாநிலம்

    ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

    July 16, 2025
    மாநிலம்

    மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை

    July 16, 2025
    மாநிலம்

    கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    July 16, 2025
    மாநிலம்

    நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    • அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அடையாளம்: இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜூலை 17 அன்று நெருங்கிய எர்த் ஃப்ளைபிக்கு அமைக்கப்பட்ட கட்டிட அளவிலான சிறுகோள் 2022 YS5 ஐ நாசா எச்சரிக்கிறது; விஞ்ஞானிகள் ஏன் விழிப்புடன் இருக்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தத்தை பரப்புவோர் மீதும் யுஏபிஏ பாயும்: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.