Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’
    மாநிலம்

    அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’

    adminBy adminJune 27, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள்.

    30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் கைப்​பற்​றியது திமுக. தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்​ம​னா​னார். அதி​முக-வைச் சேர்ந்த கண்​ணன் (எ) ராஜு வைஸ் சேர்​ம​னா​னார்.

    ஆரம்​பம் முதலே சேர்​மன் உமா மகேஸ்​வரிக்​கும் திமுக கவுன்​சிலர்​களுக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்​லை. அதி​முக கவுன்​சிலர்​களு​டன் திமுக கவுன்​சிலர்​கள் சிலரும் சேர்ந்​து​கொண்டு உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக கொடிபிடித்​தனர். இதனால் கவுன்​சில் கூட்​டத்​தில் தீர்​மானங்​களை நிறைவெற்​றவே சிரமப்​பட்​டார் உமா மகேஸ்​வரி. அதே​போல் உமா மகேஸ்​வரி, ஆளும் கட்சி கவுன்​சிலர்​களைக் கூட மதிப்​ப​தில்லை என்ற குற்​றச்​சாட்​டும் வெடித்​தது. இதனால் 2023 டிசம்​பரில் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தைக் கொண்டு வந்​தார்​கள். ஆனால் அப்​போது, அமைச்​சர்​கள் தலை​யிட்டு தீர்​மானத்தை வாக்​கெடுப்​புக்கு வரவி​டா​மல் தடுத்​தார்​கள்.

    இந்த நிலை​யில், பொது​மக்​களுக்​கான அடிப்​படை வசதி​களை செய்து தரவில்​லை, கவுன்​சில் கூட்​டத்தை முறை​யாக கூட்​ட​வில்​லை, நகராட்​சி​யில் தொட்​டது அனைத்​தி​லும் ஊழல் நடக்​கிறது என்​பது உள்​ளிட்ட புகார்​களைச் சொல்லி திமுக, அதி​முக உள்​ளிட்ட 24 கவுன்​சிலர்​கள் சேர்ந்து மீண்​டும் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்தை தாக்​கல் செய்​திருக்​கி​றார்​கள். இதன் மீதான வாக்​கெடுப்பு ஜூலை 2-ம் தேதி நடை​பெறும் என அறி​வித்​திருக்​கி​றார் நகராட்சி ஆணை​யர்.

    இதற்​கிடையே, சேர்​மன் தரப்​பை​யும் அதிருப்தி திமுக கவுன்​சிலர்​களை​யும் திமுக தலைமை அழைத்​துப் பேசி இருக்​கிறது. இப்​போது, இந்​தப் பிரச்​சினையை சுமுக​மாக பேசி முடிக்​கும் பொறுப்பை தென்​காசி வடக்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரும் எம்​எல்​ஏ-வு​மான ஈ.ராஜா​விடம் ஒப்​படைத்​திருக்​கி​றார்​கள். ஆனால், ராஜாவே உமா மகேஸ்​வரி மீது அதிருப்​தி​யில் இருப்​ப​தாகக் கூறும் சிலர், “கடந்த முறை நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வந்​த​போது அனை​வரை​யும் ‘முறை​யாக’ கவனித்​துத்​தான் பிரச்​சினையை முடித்​தார்​கள். தற்​போதும் அந்த ‘மரி​யாதையை’ எதிர்​பார்த்​துத்​தான் சிலர் இந்​தக் காரி​யத்​தில் இறங்கி இருக்​கி​றார்​கள்” என்று சொல்​கி​றார்​கள்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய வைஸ் சேர்​மன் கண்​ணன் என்ற ராஜு, “நக​ராட்சி கூட்​டத்தை மாதா மாதம் நடத்​தாமல் 3 மாதங்​களுக்கு ஒரு முறை​தான் நடத்​துகி​றார்​கள். வார்​டு​களில் எந்த வேலை​யும் நடக்​காத​தால் திமுக கவுன்​சிலர்​களே அதிருப்​தி​யில் உள்​ளனர். நகராட்சி நிர்​வாகத்​தில் சேர்​மனின் கணவர் தலை​யீடு அதி​க​மாக உள்​ள​தால் அதி​காரி​களும் அதிருப்​தி​யில் உள்​ளனர். முதல் முறை நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்​டு​வந்​த​போது மேலிடத்​தின் அழுத்​தம் காரண​மாக, திமுக கவுன்​சிலர்​கள் வாக்​கெடுப்​பில் கலந்து கொள்​ள​வில்​லை. அதனால் கூட்​டம் கோரம் இல்​லாமல் முடிந்​தது. பணத்​தால் அனைத்​தை​யும் சரி செய்​து​விடலாம் என நினைக்​கி​றார்​கள். ஆனால், கடந்த முறை தலை​மைக்கு கட்​டுப்​பட்ட திமுக கவுன்​சிலர்​கள் இம்​முறை​யும் அப்​படி கட்​டுப்​படு​வார்​களா என்று தெரிய​வில்​லை” என்​றார்.

    நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தில் கையெழுத்​திட்ட திமுக கவுன்​சிலர்​களில் ஒரு​வர் கூறும்​போது, “அதி​முக கவுன்​சிலர்​களின் வார்​டு​களில் எல்லா வேலை​களும் நடக்​கிறது. ஆனால், திமுக கவுன்​சிலர்​களின் வார்​டு​களில் எந்த வேலை​யும் நடக்​க​வில்​லை. இந்​தப் பிரச்​சினையை தலை​மை​யின் கவனத்​துக்கு கொண்டு சென்​ற​தால் தலைமை சேர்​மனை அழைத்து கண்​டித்​தது.

    அதன் பிறகு அதி​முக கவுன்​சிலர்​களுக்கு ஆதர​வாக சேர்​மன் செயல்​பட​வில்​லை. அதனால் அதிருப்​தி​யடைந்த அதி​முக கவுன்​சிலர்​கள் இப்​போது எங்​களோடு சேர்ந்து சேர்​மனுக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானத்​தில் கையெழுத்​திட்​டிருக்​கி​றார்​கள். அடுத்​த​தாக திமுக மாவட்​டச் செய​லா​ளரின் ஆதர​வுடன் திமுக-வைச் சேர்ந்த புனி​தாவை சேர்​ம​னாக்க வேலை​கள் நடக்​கிறது. இது தெரி​யாமல் பிரச்​சினையை பேசி முடிக்​கும் பொறுப்பை மாவட்டச் செய​லா​ளரிடம் ஒப்​படைத்​திருக்​கிறது திமுக தலை​மை. ஆனால் அவர், இதற்​காக எந்த முயற்​சி​யும் எடுத்​த​தாக தெரிய​வில்​லை” என்​றார்.

    இதுகுறித்து சேர்​மன் உமா மகேஸ்​வரிக்​காக நம்​மிடம் பேசிய அவரது கணவர் சரவணன், “தி​முக கவுன்​சிலர்​களிடம் தலைமை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளது. பிரச்​சினை சுமுக முடிவுக்கு வரும். நல்ல முடிவு விரை​வில் கிடைக்​கும்” என்று மட்​டும் சொன்​னார். மாவட்​டச் செய​லா​ளர் ராஜாவோ, “கவுன்​சிலர்​களிடம் பேசி சமா​தானப்​படுத்தி உள்​ளோம். உமா மகேஸ்​வரியே தொடர்ந்து சேர்​ம​னாக செயல்​படு​வார். நல்ல முடிவு ஏற்​படும்” என்​றார்.

    தேர்​தல் நெருங்க நெருங்க அறி​வால​யத்​துக்கு உடன்​பிறப்​பு​கள் இன்​னும் என்​ன​வெல்​லாம் அதிர்ச்சி வைத்​தி​யம் கொடுக்​கப் போகிறார்​களோ!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” – கிருஷ்ணசாமி தகவல்

    August 26, 2025
    மாநிலம்

    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தார் போனி கபூர்: எதிர்மனுதாரர் குற்றச்சாட்டு

    August 26, 2025
    மாநிலம்

    கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 100 வீடுகளுக்கு விநாயகர் சிலைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்

    August 26, 2025
    மாநிலம்

    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

    August 26, 2025
    மாநிலம்

    ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு ஆக.28-க்கு தள்ளிவைப்பு: திருப்பத்தூரில் போலீஸ் குவிப்பு

    August 26, 2025
    மாநிலம்

    ஆன்லைன் சேவையில் ஓடிபிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அபர்ணா சென் மீதான காதலால் வங்க மொழி கற்ற கமல்ஹாசன்…’ – மகள் ஸ்ருதிஹாசன் பகிர்வு
    • “ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” – கிருஷ்ணசாமி தகவல்
    • சமையலறை பிரதானத்திலிருந்து இயற்கை கேடயம் வரை: நமது ஆரோக்கியத்திற்கு என்ன பூண்டு செய்ய முடியும் – இந்தியாவின் காலங்கள்
    • போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தார் போனி கபூர்: எதிர்மனுதாரர் குற்றச்சாட்டு
    • ஆப்டிகல் மாயை: எல்லா இடங்களிலும் சிதறிய ஜீப்ராக்களுக்கு மத்தியில், இந்த படத்தில் மறைக்கப்பட்ட பியானோவைக் கண்டுபிடிக்க முடியுமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.