Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
    மாநிலம்

    அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா? என்பதை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

    உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனக்குரிய அதிகார வரம்பு குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரியும் அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ‘2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக வேண்டிய சூழலில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு அதிமுக குறி்த்த தேவையற்ற தகவல்களைப் பரப்ப வழிவகுத்துவிடும்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் தேர்தல் ஆணையத்தின் இத்தகையப் போக்கை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதிகார வரம்பு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் இனியும் தாமதிக்காமல், துரிதமாக நடத்தி முடிக்கும் வகையில் காலவரம்பை உயர் நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும், தற்போது வரை எந்த உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை. 2026 தேர்தலுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரினார்.

    அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார்.

    அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சமூக பொறுப்பு திட்டத்தில் சீரமைக்கப்பட்ட மணப்பாக்கம் ஏரி: பாசன வசதி பெறும் 150 ஏக்கர் விளை நிலங்கள்

    August 8, 2025
    மாநிலம்

    பள்ளிப்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அவதி 

    August 8, 2025
    மாநிலம்

    நமத்துப் போன நம்பிக்கை இல்லா தீர்மானம்! – திமுக துணை மேயரை நம்பி ஏமாந்த அதிமுக

    August 8, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கும் விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு தேசிய எஸ்சி ஆணையம் நோட்டீஸ்

    August 8, 2025
    மாநிலம்

    பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோ: மல்லை சத்யா புகார்

    August 8, 2025
    மாநிலம்

    பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமூக பொறுப்பு திட்டத்தில் சீரமைக்கப்பட்ட மணப்பாக்கம் ஏரி: பாசன வசதி பெறும் 150 ஏக்கர் விளை நிலங்கள்
    • படுக்கை நேரத்திற்கு முன் கன்சா மற்றும் நெய் உடன் கால்களை மசாஜ் செய்வதற்கான 5 காரணங்கள் (கன்சா வாட்கி)
    • நாசா எச்சரிக்கிறது! இரண்டு மாபெரும் சிறுகோள்கள், ஆகஸ்ட் 8, 2025 அன்று பூமி ஃப்ளைபிகளை நெருங்க 300 அடிக்கு மேல் ஒன்று; நாம் உண்மையில் ஆபத்தில் இருக்கிறோமா | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தடை: உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்
    • என் வெற்றிகளில் பெரிய பங்கு: அன்பறிவுக்கு லோகேஷ் நன்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.