Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு: முழு விவரம்
    மாநிலம்

    அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு: முழு விவரம்

    adminBy adminSeptember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு: முழு விவரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் இருந்து நீக்கி பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார்.

    2026 சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கிவரும் நிலை​யில், அனைத்து கட்​சிகளும் ஆயத்தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. அதி​முக தேர்​தல் பிரச்​சா​ரத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்​கி,100 தொகு​தி​களுக்கு மேல் பிரச்​சா​ரத்தை முடித்​துள்​ளது.

    இந்த ​நிலை​யில், முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கட்சி ஒன்​றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்​படுத்​தி​னார். இதுதொடர்​பாக நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘கட்​சியில் இருந்து வெளியே சென்​றவர்​களை அரவணைக்க வேண்​டும். 10 நாட்கள் அவகாசம் தரு​கிறேன். இதை நிறைவேற்​றா​விட்​டால், அதி​முக​வில் பிரிந்து சென்​றவர்​கள் அனை​வரை​யும் ஒன்​றிணைக்க வேண்​டும் என்ற ஒரு​மித்த கருத்​து கொண்​ட​வர்​களை இணைத்து கட்​சியை ஒன்​று​படுத்த நான் பாடு​படு​வேன். ஒன்​று​ப​டா​மல் நாளை அதி​முக ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடி​யாது’’ என்று தெரி​வித்​திருந்​தார்.

    மூத்த தலைவரான செங்கோட்டையன் இவ்வாறு கூறியது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திண்டுக்கல்லில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோருடன் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இந்த ஆலோசனை கூட்டம் 2 மணிநேரம் நீடித்தது. இதில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டது. அவரை ஆதரிக்கும் மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, செங்​கோட்​டையனின் கட்சிப் பதவி​களை பறித்​து,அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனிசாமி நேற்று உத்​தர​விட்​டுள்​ளார்.

    இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘அதி​முக அமைப்பு செய​லா​ளர் பொறுப்​பிலும், ஈரோடு புறநகர் – மேற்கு மாவட்டச் செய​லா​ளர் பொறுப்​பிலும் இருக்​கும் கே.ஏ.செங்​கோட்​டையன் செப்​.6-ம் தேதி (நேற்று) முதல் அந்த ​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார். ஈரோடு புறநகர் – மேற்கு மாவட்டச் செய​லா​ளர் பொறுப்​புக்கு ஒரு​வர் நியமிக்​கப்​படும் வரை, மாவட்ட கட்சி பணி​களை மேற்​கொள்​வதற்​காக அமைப்பு செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சருமான ஏ.கே.செல்​வ​ராஜ்எம்​எல்​ஏ நியமிக்​கப்​படு​கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

    கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கைக்கு செங்கோட்டையன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கோபிசெட்டிபாளையத்தில் நேற்றுசெய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில்யார் வேண்டுமானாலும் பேசலாம் எனமேடையில்தான் பழனிசாமி பேசுகிறார். நான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியது குறித்து கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த விளக்கமும் கேட்காமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

    இதற்கிடையே, போடியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘கட்சிப் பதவிகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

    7 ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பதவிகளில் இருந்து பழனிசாமி நீக்கியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டம், நம்​பியூர் வடக்கு ஒன்​றிய செய​லா​ளர் தம்பி (எ) ஏ.கே.சுப்​பிரமணி​யன், நம்​பியூர் தெற்கு ஒன்​றிய செய​லா​ளர் எம்​.ஈஸ்​வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்​டிப்​பாளை​யம் மேற்கு ஒன்​றிய செய​லா​ளர் என்​.டி.குறிஞ்​சி​நாதன், அந்​தி​யூர் வடக்கு ஒன்​றிய செய​லா​ளர் எம்​.தேவ​ராஜ், அத்​தாணி பேரூ​ராட்சி செய​லா​ளர் எஸ்​.எஸ்​.ரமேஷ், துணைச் செய​லா​ளர் வேலு (எ) தா.மருத​முத்​து, ஈரோடு மண்டல தகவல் தொழில்​நுட்​ப பிரிவு துணைச் செய​லா​ளர் கே.எஸ்​.மோகன்​கு​மார் ஆகியோர் அந்த பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கின்றனர்’ என்று கூறப்​பட்​டுள்​ளது. அதேநேரம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் பதவியில் இருந்து நீக்​கப்​பட​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

    September 7, 2025
    மாநிலம்

    அதிக விபத்து நடக்கும் இடங்களில் முதலுதவி சிகிச்சை பயிற்சி

    September 7, 2025
    மாநிலம்

    குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் உட்பட 7 பேருக்கு மட்டுமே போலீஸ் அணிவகுப்பு மரியாதை – தமிழக அரசு

    September 7, 2025
    மாநிலம்

    கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

    September 7, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் எண்ணம் நிறைவேறுவது அவசியம் – ஓ.பன்னீர்செல்வம் கருத்து; நயினார் நாகேந்திரன் வரவேற்பு 

    September 7, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு: கோப்பைகளை இன்று வழங்குகிறார் டிஜிபி

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை
    • மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
    • அதிக விபத்து நடக்கும் இடங்களில் முதலுதவி சிகிச்சை பயிற்சி
    • பிரதமர் மோடி எப்போதுமே என் நண்பர்தான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீர் பாசம்
    • குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் உட்பட 7 பேருக்கு மட்டுமே போலீஸ் அணிவகுப்பு மரியாதை – தமிழக அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.