Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் வழக்கு தொடர அனுமதித்த உத்தரவு ரத்து
    மாநிலம்

    அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் வழக்கு தொடர அனுமதித்த உத்தரவு ரத்து

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் வழக்கு தொடர அனுமதித்த உத்தரவு ரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அ​தி​முக​வின் அடிப்​படை விதி​கள் திருத்​தப்​பட்​டதை எதிர்த்து தொண்​டர்​கள் சார்​பில் உரிமை​யியல் வழக்​குத் தொடர அனு​ம​தி​யளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்யப்பட்டது.

    அதி​முக​வின் அடிப்​படை விதி​களைத் திருத்​தம் செய்ததை எதிர்த்​தும், உள்​கட்சி தேர்​தலை எதிர்த்​தும் அதி​முக தொண்​டர்​கள் சார்​பில் உரிமை​யியல் வழக்​குத் தொடர அனு​மதி கோரி வழக்​கறிஞர் பா. ராம்​கு​மார் ஆதித்​தன், கே.சி.சுரேன் பழனி​சாமி ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தனர்.

    அதில், “​முக பொதுச்​செய​லா​ள​ராகப் பதவி வகித்த ஜெயலலிதா மறைவுக்​குப்​பிறகு, கட்​சி​யில் ஒருங்​கிணைப்​பாளர், இணை ஒருங்​கிணைப்​பாளர் பதவி​கள் உரு​வாக்​கப்​பட்​டதும், அதன்பிறகு இடைக்​கால பொதுச்​செய​லாளர், பின்​னர்பொதுச் செயலாளர் பதவி உருவாக்​கப்​பட்​டதும் கட்​சி​யின் அடிப்​படை விதி​களுக்​கும், சட்ட திட்​டங்​களுக்​கும் எதி​ரானது’’ என கோரி​யிருந்​தனர்.

    இந்த மனுக்களை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிபதி பி.வேல்​முரு​கன், அதி​முக கட்சி விதி​கள் திருத்​தப்​பட்​டதற்கு எதி​ராக உரிமை​யியல் வழக்​குத்​தொடர இரு​வருக்​கும் அனு​ம​தி​யளித்து உத்​தரவிட்​டிருந்​தார். தனி நீதிப​தி​யின் இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை, நீதிப​தி​கள் அனிதா சுமந்த், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் ஏற்​கெனவே நடந்​தது.

    அப்​போது பழனி​சாமி தரப்​பில், “அ​தி​முக​வுக்கு எதி​ராக வழக்கு தொடர்ந்​துள்ள ராம்​கு​மார் ஆதித்​தனும், சுரேன் பழனி​சாமி​யும் அதி​முக உறுப்​பினர்​களே கிடை​யாது. எனவே இதுதொடர்​பாக தனி நீதிபதி பிறப்பித்​துள்ள உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்’ என வாதிடப்​பட்​டது.

    இதற்கு ராம்​கு​மார் ஆதித்​தன் மற்​றும் சுரேன் பழனி​சாமி தரப்​பில், ‘‘நாங்​கள் அதி​முக​வின் உறுப்​பினர்​கள் என்​பதை சட்​டப்​பூர்​வ​மாக நிரூபித்த பிறகே அதி​முக​வின் அடிப்​படை விதி​கள் திருத்​தப்​பட்​டதை எதிர்த்து வழக்​குத்​ தொடரதனி நீதிபதி அனு​ம​தியளித்​தார்.

    எனவே பழனிசாமிதாக்கல் செய்​துள்ள இந்த மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும்’’ என வாதிடப்​பட்​டது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் அனிதா சுமந்த், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​திருந்​தது.

    இந்​நிலை​யில் நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “பழனி​சாமி தொடர்ந்​துள்ள மேல்முறை​யீட்டு மனு ஏற்​புடையது என்​ப​தால் அதி​முக​வின் விதி​கள் திருத்​தப்பட்​டதை எதிர்த்து தொண்​டர்​கள் சார்​பில் வழக்​குத் தொடர ராம்​கு​மார் ஆதித்​தன், சுரேன் பழனி​சாமி ஆகியோ​ருக்குஅனு​ம​தியளித்து தனி நீதிபதபிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. அதே​நேரம் மனு​தா​ரர்​கள் தனிப்பட்ட முறை​யில்​ வழக்குத்​ தொடர தடை​​ இல்​லை’’ என உத்​தர​விட்​டுள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் விநியோகம் தொடக்கம்

    September 21, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்க அலுவலகம் திறப்பு

    September 21, 2025
    மாநிலம்

    மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    September 21, 2025
    மாநிலம்

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரயில் நிலையங்களில் விற்கப்படும் ‘ரயில் நீர்’ விலை குறைப்பு
    • ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ‘ஃபாட்டர்’ பெறுவதற்கான 3 காரணங்கள்: பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ எடை அதிகரிப்பை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: விஎச்பி கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கண்டனம்
    • செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் விநியோகம் தொடக்கம்
    • நீரிழிவு நோயாளிகள் ஏன் வெங்காயத்தை சாப்பிட வேண்டும்: ஆய்வு அவர்கள் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைப்பதைக் காட்டுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.