Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 
    மாநிலம்

    அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 

    adminBy adminAugust 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்​தில் ஏற்​படும் விபத்​துகளில் பெரும்​பாலானவை குடி​போதை​யில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் ஏற்​படு​வ​தாக ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. அடுத்​த​தாக, அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் விபத்​துகள் நிகழ்​வ​தாக​வும் ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. வாகன ஓட்​டிகள் குடித்​திருக்​கிறார்​களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்​ப​தில் பல நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தால், காவல் துறை கடமைக்​காக ஆய்வு செய்​கின்​றன.

    ஆனால், பாரம் ஏற்றி வரும் வாக​னங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவு​தான் ஏற்​றப்​பட்​டிருக்​கிறதா என எளி​தாக சோதிக்க முடி​யும். வட்​டார போக்​கு​வரத்து துறை​யினர், காவல் துறை​யினர் தங்​கள் பணியை சரி​யாக செய்​தால், சாலை விபத்​துகள் தவிர்க்​கப்​படும். ஆனால், இந்த இரு துறை​களும் அரசுக்கு வரு​வாய் இழப்பை ஏற்​படுத்​தி, தங்​கள் வரு​வாயை மட்​டும் அதி​கரித்து கொள்​கின்​றன.

    செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நூறுக்​கும் மேற்​பட்ட லாரி​கள் கனிமவளத்தை கொண்டு செல்​கின்​றன. இதில் அதிக பாரம் ஏற்​றி​னால், அதிக வாடகை பெறலாம் என்ற எண்​ணத்​தில் சில ஓட்​டுநர்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவுக்கு மீறி பாரம் ஏற்றி செல்​கின்​றனர். அதனை சோதிக்க வேண்​டிய அதி​காரி​கள், அதை செய்​யாமல் ஆபத்​தான வகை​யில் வாக​னங்​களை இயக்க அனு​ம​தித்து விடு​கின்​றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக

    பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்.

    அதிக எடை ஏற்​றிச் செல்லும் வாக​னங்​கள் பழு​தாகி நின்று போனால் மற்ற வாக​னங்​கள் அதில் மோதி உயி​ரிழப்பு ஏற்​படுகிறது. அதிக எடை ஏற்​றிய வாக​னத்​துக்கு ரூ. 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்​டத்​தில் இடமிருக்​கிறது. சரி​யாக, முறை​யாக செயல்​ப​டாத அதி​காரி​களை தண்​டிக்​க​வும் சட்​டம் இருக்​கிறது.

    போக்​கு​வரத்​து​துறை மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் கையூட்டு பெறாமல் கண்​டிப்பு மற்​றும் மனசாட்​சி​யுடன் நடந்து கொண்டு தவறு செய்​பவர்​களை நீதி​மன்​றத்​தில் நிறுத்​தி​னால், அதிக பாரம் ஏற்றிச் செல்​லும் வாக​னங்​களால் ஏற்​படும் சாலை விபத்​துகள், உயி​ரிழப்​பு​கள் நிச்​ச​யம் குறை​யும். அரசுக்​கும் வரு​மானம் அதி​கரிக்​கும்.

    இது குறித்து சமூக ஆர்​வலர் மித்​ரன் கூறியது: அனு​ம​திக்​கப்​பட்​டதை​விட அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் சாலை​யில் பெரும் ஆபத்து ஏற்​படு​கிறது. 2005-ம் ஆண்​டில் சாலைகளில் கூடு​தல் பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களை இயக்​கு​வதற்கு உச்​சநீ​தி​மன்​றம் தடை விதித்​தது. இருப்​பினும், கூடு​தல் சுமை ஏற்​றிச் செல்​லும் போக்கு தொடர்ந்து வரு​கிறது.

    சாலை விபத்​துகளில் அதிக உயி​ரிழப்பு ஏற்​படு​வதற்கு முக்​கிய காரண​மாக விளங்​கு​வது அதிக பாரத்தை ஏற்​றிச் செல்​லும் சரக்கு வாக​னங்​களே என்​ப​தால், அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் சரக்கு வாக​னங்​களுக்கு அதிக அபராதம், வாகன உரிமை​யாளர்​களுக்​கு, 5 ஆண்டு வரை சிறைத்​தண்​டனை கிடைக்​கும் என, அரசு எச்​சரித்​துள்​ளது. ஆனால் இந்த சட்​டங்​களை சரி​யாக செயல்​படுத்​து​வ​தில்​லை.

    மேலும், சரக்கு வாக​னங்​களில் பதிவுச் சான்​றின்​படி அனு​ம​திக்​கப்​பட்ட எடையை விட கூடு​தலாக பாரம் ஏற்றி இயக்​கும் வாகன உரிமை​யாளர்​கள் மீது, 1988-ம் வருடத்​திய மோட்​டார் வாக​னச் சட்ட பிரிவு – 194-ன் படி, அதிக பாரம் ஏற்​றியதற்கு ரூ.20,000/- அபராத​மும், கூடு​தலாக வாக​னத்​தில் ஏற்​றப்​படும் ஒவ்​வொரு டன்​னுக்​கும் ரூ.2000-/ வீதம் அபராதம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இது ஏட்​டள​வில் மட்​டுமே உள்​ளது.

    குறிப்​பாக தாம்​பரத்​தி​லும், செங்​கல்​பட்டு பகு​தி​களி​லும் ஏராள​மான கல்​கு​வாரி​கள், கிரஷர்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றி​லிருந்து கற்​கள், ஜல்​லி, எம்​.​சாண்ட் போன்ற பொருட்​களை ஏற்றிச் செல்​லும் லாரி​கள் அதிக பாரத்​துடன் செல்​கின்​றன.

    இதனை தாம்​பரம், செங்​கல்​பட்டு வட்​டார போக்​கு​வரத்து ஆய்​வாளர்​கள் கண்​டு​கொள்​வதே இல்​லை. காரணம் அவர்​களுக்கு மாதம் ஒரு குறிப்​பிட்ட தொகை வழங்​கப்​படு​கிறது. இதனால் அவர்​கள் கண்டு கொள்​வதே இல்​லை.

    ஆய்​வு​கள் செய்​கிறோம் என்ற போர்​வை​யில் ஒரு வாக​னம் வைத்​திருக்​கும் உரிமை​யாளர்​களுக்கு மட்​டும் அபாரதம் விதிக்​கப்​படு​கிறது. அதிக வாக​னங்​களை வைத்​துள்ள பெரிய நிறு​வனங்​கள் மற்​றும் முதலா​ளி​களிடம் ஒவ்​வோரு மாதம் மாமுல் பெற்​றுக் கொண்டு நடவடிக்கை எடுப்​ப​தில்​லை.

    காவல்​துறை அதி​காரி​களும், வட்​டாரப் போக்​கு​வரத்து ஆய்​வாளர்​களும் இது​போல செயல்​படு​வ​தால் அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படுத்​தி, தங்​களின் வரு​வாயை மட்​டும் அவர்​கள் பெருக்​கிக் கொள்​கின்​றனர்.

    கூடு​தல் பாரத்​துட​னும், அதிவேக​மாக​வும் இவ்​வாக​னங்​கள் இயக்​கப்​படு​வதை தடுக்க வட்​டார போக்​கு​வரத்து அதி​காரி​கள் முறை​யாக வாகன தணிக்கை செய்​து நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இதற்​கு அரசு உரிய உத்​தர​வு​களை பிறப்​பிக்​க வேண்​டுமென வாக​ன ஓட்​டிகள்​ எதிர்​பார்க்​கின்​றனர்​, என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!

    August 2, 2025
    மாநிலம்

    எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் ஆக.7-ம் தேதி சர்வதேச மாநாடு

    August 2, 2025
    மாநிலம்

    பணியாளர் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    August 2, 2025
    மாநிலம்

    ‘பிளான் அப்ரூவல் வேணுமா… பிளாட்டை எழுதிக் கொடு!’ – வேலூர் மேயருக்கு எதிராக வெதும்பும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்

    August 2, 2025
    மாநிலம்

    அன்புமணி நடைபயணத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ராமதாஸ் விமர்சனம்

    August 2, 2025
    மாநிலம்

    கவின் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி, திருமாவளவன், நயினார் நாகேந்திரன் ஆறுதல்

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!
    • எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் ஆக.7-ம் தேதி சர்வதேச மாநாடு
    • கால் உடற்பயிற்சிகளும்: கால் மற்றும் கன்று தசைகளை வலுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய 7 எளிய பயிற்சிகள்
    • பணியாளர் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    • ‘பிளான் அப்ரூவல் வேணுமா… பிளாட்டை எழுதிக் கொடு!’ – வேலூர் மேயருக்கு எதிராக வெதும்பும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.