Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 
    மாநிலம்

    அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 

    adminBy adminOctober 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் வீடியோ ஆதா​ரங்​களு​டன் விளக்​கம் அளித்​தனர்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக விஜய் சில கருத்​து களை வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார்.

    இந்​நிலை​யில், தமிழக அரசின் ஊடகச் செயலரும், வரு​வாய்த் துறைச் செயலரு​மான பி.அ​மு​தா, சட்​டம்​-ஒழுங்கு கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் நேற்று தலை​மைச்செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, விஜய் பிரச்​சா​ரம் தொடர்​பான வீடியோ காட்​சிகளை காண்​பித்​து, கூட்ட நெரிசல் நிகழ்​வு​களை விவரித்​தனர்.

    அப்​போது அமுதா கூறிய​தாவது: கரூர் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் தவறான கருத்​துகள் பகிரப்​படு​கின்​றன. அன்று பிற்​பகல் 3 மணி வரை 10,000 பேர்​தான் இருந்​தனர். ஆனால், விஜய் வந்த பிறகு கூட்​டம் படிப்​படி​யாக அதி​கரித்து கூடு​தலாக 25 ஆயிரம் பேர் கூடி​யிருப்​பார்​கள் என்று கருதுகிறோம். அவரது வாக​னத்​தின் பின்​னால் ஏராள​மானோர் வாக​னங்​களில் வந்​துள்​ளனர். அன்று காலை முதலே காத்​திருந்​தவர்​களுக்கு தண்​ணீர்​கூட கிடைக்​க​வில்​லை. நீண்ட நேரம் காத்​திருந்​த​தால் நிறைய பேருக்கு தண்​ணீர் சத்து குறைவு ஏற்​பட்டு சிரமப்​பட்​டுள்​ளனர். நெரிசல் சம்​பவத்​துக்​குப் பிறகு இரவு 7.40 மணி முதல் 9.45 மணி வரை, நெரிசலில் சிக்​கிய​வர்​கள் ஆம்​புலன்​ஸ்​களில் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

    பிரச்​சா​ரத்​தின்​போது மின்​சா​ரம் தடை செய்​யப்​பட்​ட​தாக தகவல் பரப்​பப்​படு​கிறது. ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது தடை​யில்லா மின்​சா​ரம் விநி​யோகிக்​கப்​பட்​ட​தாக மின்​சார வாரிய தலை​மைப் பொறி​யாளர் விளக்​கம் அளித்​திருக்​கிறார். மின் விளக்​கு​களும் அணைக்​கப்​பட​வில்​லை. கூட்ட நெரிசல் அதி​கரித்​து,அரு​கே​யிருந்த ஜெனரேட்​டர் அறைக்​குள் கூட்​டம் முண்​டியடித்து உள்ளே நுழைய முயன்​ற​போது ஜெனரேட்​டர் நிறுத்​தப்​பட்​டது. அதனால்​தான் போகஸ் லைட் எரிய​வில்​லை.

    கரூர் சம்​பவத்​தைப் பொருத்​தவரை அரசு சார்​பில் உடனுக்​குடன் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அதே​போல, சீனியர் எஸ்​.பி. தலை​மை​யில் போலீஸ் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறும்​போது, “கரூர் கூட்​டத்​துக்கு 10 ஆயிரம் பேர் வரு​வார்​கள் என்று கூறி அனு​மதி கேட்​கப்​பட்​டது. பொது​வாக 50 பேருக்கு ஒரு காவலர் பணி​யில் அமர்த்​தப்​படு​வது வழக்​கம். எனினும், விஜய் கலந்​து​கொண்ட முந்​தைய கூட்​டங்​களில் கூடிய கூட்​டத்​தின் அடிப்​படை​யில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்​படை​யில் நியமித்​தோம்.

    கூட்​டத்​தினர் மீது போலீஸ் தடியடி நடத்​தி​ய​தாக கூறுகிறார்​கள். விஜய் கார் பின்​னால் வந்த கூட்​டம், அவரது கார் நின்​றவுடன் முன்​பக்​கம் முண்​டியடித்து வர முயற்​சித்​த​தால், கூட்​டத்தை விலக்​கவே போலீ​ஸார் முயற்​சித்​தனர். கூட்​டம் அதி​கரித்​த​தால் கூடு​தல் போலீ​ஸார் வரவழைக்​கப்​பட்​டனர்” என்​றார்.

    சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: திடீரென அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்​ஸ்​கள் எப்​படி அங்கு வந்தன என்ற சந்​தேகம் எழுப்​பப்​பட்டு வரு​கிறது. நெரிசல் சம்​பவம் ஏற்​பட்டு 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு இரவு 7.14 மணிக்கு அழைப்பு வந்​தது. உடனடி​யாக 7.20 மணிக்கு சம்பவ இடத்​துக்கு ஓர் ஆம்​புலன்ஸ் அனுப்​பப்​பட்​டது. பின்​னர், இரவு 7.15 மணிக்கு அடுத்த அழைப்பு வரவே 7.23 மணிக்கு அடுத்த ஆம்​புலன்ஸ் சென்​றது. தொடர்ந்து அடுத்​தடுத்து அழைப்​பு​கள் வந்​த​தால், உடனடி​யாக அரு​கில் உள்ள மாவட்​டங்​களில் இருந்து ஆம்​புலன்​ஸ்​கள் வரவழைக்​கப்​பட்​டன. தவெக கட்சி சார்​பில் 7, அரசின் 108 ஆம்​புலன்​ஸ்​கள் 6, மற்ற மாவட்​டங்​களில் இருந்து 33 ஆம்​புலன்​ஸ்​கள் அங்கு சென்​றன.

    எதற்​காக அவசர​மாக பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது என்று கேட்​கிறார்​கள். பொது​வாக, அதிக எண்​ணிக்​கையி​லான உயி​ரிழப்​பு​கள் நிகழும்​போது பிரேதப் பரிசோதனை செய்ய கால​தாமத​மாகும். இது பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு வேதனையை அதி​கரிக்​கும் என்​பதால், நல்​லெண்​ணத்​தில் அடிப்​படை​யில் பிரேதப் பரிசோதனை விரை​வாக செய்து முடிக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது, உள்​துறைச்​ செயலர்​ தீரஜ்கு​மார்​, டிஜிபி (பொறுப்பு) வெங்​கட்​ராமன்​ உடனிருந்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பலன் கொடுக்குமா பள்ளபட்டி ஜாதகம்? – அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தை சுற்றும் உடன்பிறப்புகள்!

    October 1, 2025
    மாநிலம்

    எங்களுக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொகுதி வேணும்! – பாஜக கோரிக்கையால் கதிகலங்கும் கோவை அதிமுக

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை

    October 1, 2025
    மாநிலம்

    டெட் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    October 1, 2025
    மாநிலம்

    ‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்

    October 1, 2025
    மாநிலம்

    கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பலன் கொடுக்குமா பள்ளபட்டி ஜாதகம்? – அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தை சுற்றும் உடன்பிறப்புகள்!
    • எங்களுக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொகுதி வேணும்! – பாஜக கோரிக்கையால் கதிகலங்கும் கோவை அதிமுக
    • கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை
    • ஆங்கிலத்தில் பாபுகோஷா என்ன அழைக்கப்படுகிறது: அதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெட் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.