Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அண்ணா பெயரை உச்சரிக்க ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?” – இபிஎஸ் காட்டம்
    மாநிலம்

    “அண்ணா பெயரை உச்சரிக்க ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?” – இபிஎஸ் காட்டம்

    adminBy adminJune 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அண்ணா பெயரை உச்சரிக்க ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?” – இபிஎஸ் காட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுகவைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், “அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” என்கிறார்.

    அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுகவுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? “அண்ணா – இதய மன்னா” என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுகவை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

    ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இன்று வானத்துக்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999 – 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான். தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல் வேஷக் கட்சியான திமுகவை 2026-ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள். திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி,” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    என்ன பேசினார் முதல்வர் ஸ்டாலின்? – முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, “மத்தியில் இருப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக் கூடிய அதிமுகவையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பாஜகவும், அதிமுகவும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், மதத்துக்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல்.

    தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண், அண்ணா வளர்த்த மண், கருணாநிதி இதை மீட்ட மண், தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.

    கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவுக்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவாலயங்களை மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.

    அவர்களால் தமிழ்நாட்டுக்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை, ஓட்டு கேட்க முடியவில்லை, முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும். அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் திமுக ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். மறைந்த முதல்வர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.

    அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும் எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?

    August 8, 2025
    மாநிலம்

    தனியார் விளம்பர பேரிகார்டுகளை அகற்றக் கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 8, 2025
    மாநிலம்

    காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    August 8, 2025
    மாநிலம்

    எப்எல்- 2 மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 8, 2025
    மாநிலம்

    பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் இன்று வெளியிடுகிறார்

    August 8, 2025
    மாநிலம்

    “பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி!” – ராமதாஸ் வேதனை

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?
    • வாரத்திற்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட உணவு அல்லது உணவு விநியோகமா? உங்கள் உடலுக்கு இது என்ன செய்கிறது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தனியார் விளம்பர பேரிகார்டுகளை அகற்றக் கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • மிளகுக்கீரை Vs ஸ்பியர்மிண்ட்: அவற்றின் சுவை, நறுமணம், சுவை மற்றும் சுகாதார நன்மைகளில் முக்கிய வேறுபாடுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.