Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அண்ணா, கருணாநிதி கொடுத்ததை ஸ்டாலின் பறித்தார்: விஜய்யை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குற்றச்சாட்டு
    மாநிலம்

    அண்ணா, கருணாநிதி கொடுத்ததை ஸ்டாலின் பறித்தார்: விஜய்யை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குற்றச்சாட்டு

    adminBy adminJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அண்ணா, கருணாநிதி கொடுத்ததை ஸ்டாலின் பறித்தார்: விஜய்யை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார்.

    சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய்யை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து 8 முறை சந்தித்த பின்னரும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அரசை நம்பி ஏமாற்றமடைந்தோம். மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவை கோரி வருகிறோம். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தோம். அவரும் ஆதரவளித்து, அரசுக்கு அழுத்தம் தருவதாக உறுதியளித்தார். ஜாக்டோ ஜியோவையும் அழைத்து போராட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததால் அதிமுக தலைவர்களைச் சந்திப்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு எதுவும் கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி கொடுத்த ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக பரந்தூர் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, “தவெகவைத் தொடங்கியதும் முதல் போராட்டமாக எங்களது போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம். பரந்தூரில் ஏன் விமான நிலையம் அமையக் கூடாது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய விரிவான மனுவை அவரிடம் அளித்துள்ளோம்.

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் வரை துணை நிற்பதாகவும், திட்டத்துக்கு எதிராக எவ்விதப் போராட்டமாக இருந்தாலும் ஆதரவளிப்பதாகவும் விஜய் உறுதியளித்தார். தேவைப்பட்டால் கண்டிப்பாக போராட்ட களத்துக்கு வருவதாகவும் கூறினார்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

    September 16, 2025
    மாநிலம்

    வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை: இந்திய கம்யூ. வரவேற்பு

    September 16, 2025
    மாநிலம்

    மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு: பெயர், கொள்​கைகளை முடிவு செய்ய 15 பேர் குழு

    September 16, 2025
    மாநிலம்

    “பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன்

    September 16, 2025
    மாநிலம்

    ஜவுளி நிறுவனத்தில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரெட்ரோ புடவைகளுக்குப் பிறகு, AI- உருவாக்கிய துர்கா பூஜா படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகின்றன: நானோ வாழைப்பழம் மற்றும் கூகிள் ஜெமினியில் படங்களை உருவாக்க சிறந்த தூண்டுதல்களையும் முழுமையான வழிகாட்டியையும் சரிபார்க்கவும்
    • வன்முறையில் ஈடுபட்ட 5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் மாநில அரசு முடிவு
    • தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை
    • புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையைத் தடுக்கும் புரதங்கள் மற்றும் நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.