Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி
    மாநிலம்

    ​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி

    adminBy adminAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதிமுக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார்.

    தூத்​துக்​குடி​யில் தொழில்​முனை​வோர், விவ​சா​யிகள், உப்புஉற்​பத்​தி​யாளர்​கள், மீனவர்​கள் மற்​றும் வழக்​கறிஞர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

    அகில இந்​திய தொழில் வர்த்தக சங்​கம், லாரி உரிமை​யாளர் சங்​கம், நாட்​டுப்​படகு மீனவர் சங்​கம், சிறு வணி​கர் சங்​கம், குரூஸ் பர்​னாந்து மக்​கள் மன்​றம், வழக்​கறிஞர்​கள் சங்​கம், புதி​யம்​புத்​தூர் ஜவுளி வியா​பாரி​கள் சங்​கம், ஸ்பிக் தொழிலா​ளர் நலச்​சங்​கம், வாழை, கடலை விவ​சா​யிகள் சங்​கம், பேய்​குளம் நிலச்​சு​வான்​தார்​கள் விவ​சா​யிகள் அபி​விருத்தி சங்​கம், பெந்​த​கொஸ்தே சபை ஆகிய அமைப்​பு​களை சேர்ந்த நிர்​வாகி​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​துப் பேசினர். தொடர்ந்து பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் தூத்​துக்​குடி விமான நிலை​யம் அமைக்க 750 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த நிதி ஒதுக்​கப்​பட்​டு, பணி​கள் தொடங்​கின. இத்​திட்​டத்​துக்கு நிலம் எடுப்​ப​தற்கு முழு காரணம் அதி​முக அரசு​தான். மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​ததும், தூத்​துக்​குடி​யில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். அதே​போல, வி.​வி.டி. சந்திப்பு பகு​தி​யில் பாலம் அமைக்​க​வும், உப்​பளத் தொழிலா​ளர்​களுக்கு நலவாரி​யம் அமைக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

    குடிம​ராமத்து திட்​டம் மூலம் குளங்​கள் தூர்​வாரப்​படும். தொழில்​கள் தொடங்​கு​வதற்​கான அனு​மதி பெற ஒற்​றைச்​சாளர முறையை மீண்​டும் கொண்​டு​வரு​வோம். அதி​முக ஆட்​சி​யில்​தான் சாலைகள் தரமாக விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டன. இந்​தி​யா​விலேயே அதிக நீளத்​தில் தார் சாலைகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்ற சூழலை உருவாக்​கினோம்.

    2022 காவல் துறை மானியக் கோரிக்​கை​யின்​போது பள்​ளி, கல்​லூரி அருகே கஞ்சா விற்​பனை செய்​த​தாக 2,348 பேர் கண்​டறியப்​பட்​டு, 140 பேர் கைது செய்​யப்​பட்​ட​தாக தெரி​வித்​தனர். எங்கு பார்த்​தா​லும் போதைப் பொருட்​கள் விற்​பனை நடக்​கிறது. கொலை, கொள்​ளை, திருட்​டு, பாலியல் சீண்​டல் நடப்​ப​தற்கு போதைப் பொருள் பழக்​கமே முக்​கியக் காரணம்.

    போலீ​ஸாருக்கு முழு சுதந்​திரம் கொடுத்​தால்​தான் போதைப் பொருட்​கள் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யும். 2021-க்கு முன்பு காவல் துறை எப்​படி செயல்​பட்​டு, தற்​போது எப்​படி செயல்​படு​கிறது? மீண்​டும் அதி​முக ஆட்சி அமை​யும் ​போது, இரும்​புக்​கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்.

    பின்​னர், தூத்​துக்​குடி தூய பனிமய மாதா பேரால​யத்​தில் அவர் வழிப்​பட்​டார். அவருக்​கு, தூய பனிமய மாதா படத்தை பங்​குத்​தந்தை ஸ்டார்​வின் ஆசீர் அளித்​தார். முன்​னாள் அமைச்​சர்​கள் கடம்​பூர் செ.​ராஜு, எஸ்​.பி.சண்​முக​நாதன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை

    August 3, 2025
    மாநிலம்

    மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் – ஸ்கூபா டைவிங் மூலம் உடல் மீட்பு

    August 3, 2025
    மாநிலம்

    ‘தன்மான உணர்வை விதைத்த வீரப்பெருஞ்சுடர்’ – தீரன் சின்னமலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    August 3, 2025
    மாநிலம்

    ‘தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்! ’ – தீரன் சின்னமலைக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

    August 3, 2025
    மாநிலம்

    ‘அந்நிய படைகளுக்கு சிம்மசொப்பனம்’ – தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு இபிஎஸ் மரியாதை!

    August 3, 2025
    மாநிலம்

    பயணிக்கு நெஞ்சுவலி: சிகிச்சைக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே விமானம் சென்னையில் தரையிறக்கம்

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை
    • தினமும் காபி குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்குமா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்!
    • மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் – ஸ்கூபா டைவிங் மூலம் உடல் மீட்பு
    • புதிய ஆராய்ச்சி கருப்பு சீரகத்தை ஒரு இயற்கை மூட்டுவலி தீர்வாக ஆதரிக்கிறது: இதை உட்கொள்வதற்கான சரியான வழி இதுதான் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.