Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
    மாநிலம்

    அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூத்கமிட்டி அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 4 முனை போட்டி இருக்கும் என தெரிகிறது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக களம் காண தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    இது ஒருபுறம் இருக்க, இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் இறுதி வாக்காாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, இதுவரை பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாக சேர்க்க முடியும்.

    இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதற்கான கருத்துகளையும் கேட்டு அதன்படி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஒட்டியே சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வாக்காளர்கள் பதிவை முறைப்படுத்துவது, குளறுபடிகளை களைவது போன்ற பணிளுக்காக தொகுதிவாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான வாக்காளர் பதிவு அதிகாரிகள் யார் என்ற பட்டியலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

    குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர் , மாநகராட்சிகளில் உதவி ஆணையர், நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணிகளை முழுமையாக கண்காணி்ப்பார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்ட வாரியாக பார்வையாளர்களும் நியமி்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணிகளும் நடைபெறும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    மாநிலம்

    பலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று கூடும் மதிமுக நிர்வாக குழு

    June 29, 2025
    மாநிலம்

    பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 29, 2025
    மாநிலம்

    முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது
    • இந்த சிந்தனை சைகைகளுடன் குழந்தைகளுக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்வதற்கான 8 வழிகள்
    • பலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று கூடும் மதிமுக நிர்வாக குழு
    • கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்கும் கவனத்தை அதிகரிப்பதற்கும் குழந்தைகளுக்கு 7 முக்கியமான உதவிக்குறிப்புகள்
    • பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.