Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் மீது திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா, தாயாரிடம் சிபிஐ விசாரணை!
    மாநிலம்

    அஜித்குமார் மீது திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா, தாயாரிடம் சிபிஐ விசாரணை!

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் மீது திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா, தாயாரிடம் சிபிஐ விசாரணை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம் கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமியம்மாள் ஆகியோர் கடந்த ஜூன் 27-ம் தேதியன்று சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்றனர். அப்போது காரில் இருந்த நிகிதாவின் நகை காணாமல் போன புகார் தொடர்பாக கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

    இந்த வழக்கை டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். மடப்புரம் கோயில், திருப்புவனம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என பல இடங்களிலும் நேரில் விசாரித்தனர். அஜித்குமார் மரணத்துக்கு முன்பு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவின்குமார், வினோத்குமார், அவரது தம்பி நவீன்குமார், தனிப்படை வாகன ஓட்டுநரான காவலர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 18-ம் தேதி விசாரித்தனர்.

    மேலும், இவ்வழக்கு குறித்து திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, கோயில் அலுவலர்கள் ஆகிய 7 பேரிடமும் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்தது. இதனிடையே, இச்சம்பவத்துக்கு முன்னதாக நகை திருடு போனதாக அஜித்குமார் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தயார் சிவகாமி அம்மாள் ஆகியோரிடமும் விசாரிக்க, அவர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.

    இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் இருவரும் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு சிவப்பு நிற காரில் வந்து ஆஜராகினர். அவர்களிடம் டிஎஸ்பி மோகித்குமார் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். புகாரின் உண்மைத் தன்மை, எந்த இடத்தில் நகையை காணவில்லை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை பெற்றதாக தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் ஆக.2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    July 27, 2025
    மாநிலம்

    ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள்: பிரதமர் மோடி உறுதி

    July 27, 2025
    மாநிலம்

    100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

    July 27, 2025
    மாநிலம்

    “எனக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இல்லையா?” – திருமாவளவன் ஆவேசம்

    July 27, 2025
    மாநிலம்

    “முதல்வர் நம்பிக்கையுடன் சிகிச்சை பெறத்தக்க அரசு மருத்துவமனை இல்லையே!” – தமிழிசை ஆதங்கம்

    July 27, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜடேஜா, வாஷி அபார சதம்: டிராவில் முடிந்த மான்செஸ்டர் போட்டி!
    • ஆமிர்கான் நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்
    • தமிழகத்தில் ஆக.2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • ரூ.300 கோடி வசூலை கடந்த ‘சயாரா’ – பாலிவுட் வியப்பு
    • ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள்: பிரதமர் மோடி உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.