Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் கொலை வழக்கு: 4-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை; டிஎஸ்பி நேரில் ஆஜர்
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: 4-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை; டிஎஸ்பி நேரில் ஆஜர்

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் கொலை வழக்கு: 4-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை; டிஎஸ்பி நேரில் ஆஜர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 4-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார்.

    முன்னதாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீஸாரிடம் அரை மணி நேரம் விசாரித்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார்.

    கொலையும், விசாரணையும்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூலை 2-ம் தேதியில் இருந்து திருப்புவனம் காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

    அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர்.

    தொடர்ந்து நீதிபதி அஜித்குமார் தாயார், சகோதரர், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் இன்றும் (ஜூலை 5) திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார்.

    முன்னதாக நேற்று விசாரணைக்கு ஆஜரான திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் “ஜூன் 28 மாலை 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன். உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கச் சொன்னேன். ஆனால், உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் உடலை எடுத்துச் சென்றனர்.” என மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கல்வித் துறையை சீரழிக்கிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் சாடல்

    July 5, 2025
    மாநிலம்

    “இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

    July 5, 2025
    மாநிலம்

    திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் செய்ய முறையான அனுமதி தேவை: அமைச்சர் சேகர்பாபு

    July 5, 2025
    மாநிலம்

    “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து

    July 5, 2025
    மாநிலம்

    “அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” – திருமாவளவன் 

    July 5, 2025
    மாநிலம்

    ‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்… இந்த அவல ஆட்சி தேவையா?’ – தமிழக மக்களுக்கு இபிஎஸ் மடல்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு
    • கல்வித் துறையை சீரழிக்கிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் சாடல்
    • யாரையும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடிய 7 உளவியல் தந்திரங்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆக.1-ல் தமிழகம் முழுவதும் தொடக்கம்
    • “இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.