Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?
    தொழில்நுட்பம்

    டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

    உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வெளிவந்தது. தொடர்ந்து கூகுளின் Gemini, எக்ஸ் தளத்தின் Grok என ஏஐ சாட்பாட்களின் பட்டியல் நீண்டது.

    அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்டத்தை அமைதியாக கவனித்தது சீனா. இந்தச் சூழலில் தான் நடப்பு ஆண்டின் ஜனவரியில் சீனாவை சேர்ந்த ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் ஆர்1 மாடல் அறிமுகம் செய்தது. அது சில நாட்களில் உலக அளவில் கவனம் பெற்றது. சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளியது. இருப்பினும் சில நாடுகளில் சில காரணங்களால் தடையை எதிர்கொண்டது. இந்நிலையில், Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது.

    இதை ஸ்டார்ட்-அப் நிறுவனமான Monica அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் பலரது கவனத்தை இது பெற்றுள்ளது. சீனாவை அடுத்த ஏஐ புரட்சி என இப்போது இதை டெக் வல்லுநர்கள் சொல்லி உள்ளதாக தகவல். இப்படி அதை சொல்ல காரணம் சவாலான டாஸ்குளை கையாளும் திறனை Manus கொண்டுள்ளது தான். இப்போதைக்கு இதை அழைப்பின் பேரில் மட்டுமே வெப் ப்ரிவ்யூவாக பார்க்க முடியும். இது குறித்த டெமோ வீடியோ ஒன்றும் manus.im தளத்தில் வெளியாகி உள்ளது.

    Manus? – உலகின் முதல் அசல் ஏஐ ஏஜென்ட் என இது சொல்லப்படுகிறது. இதற்கு கொடுக்கப்படும் சவாலான டாஸ்குகளை சுயமாக சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்தும். பயனர் கேட்கும் தகவலை விரிவானதாக தரும். இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் DeepSearch-னை விடவும் சிறப்பாக செயல்படும் என தகவல். வெப்சைட் உருவாக்கம், பயண திட்டமிடல், பங்குகள் குறித்த விரிவான அறிக்கை என பல்வேறு துறை சார்ந்த தகவல்களை இது தரும் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பயனர்கள் கொடுக்க வேண்டியது வெறும் ஒரு Prompt மட்டுமே. கடந்த 6-ம் தேதி இது அறிமுகம் ஆகியுள்ளது. இதை சோதித்து பார்த்தவர்களும் சிறந்த ஏஐ என சொல்லி உள்ளனர்.

    தானியங்கி முறையில் டாஸ்குகளை மேற்கொள்வது, தனித்துவம், நிகழ் நேரத்தில் இன்டரெக்ட் செய்வது, வெறும் டெக்ஸ்ட்களை மட்டுமே தராது அதை பிடிஎஃப், ஸ்ப்ரெட்ஷீட் பிரசென்டேஷனாகவும் வழங்கும். மேலும், லைவ் வெப் பேஜ்களை இது பிரவுஸ் செய்கிறது. இது அனைத்தும் இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளது. சாட்ஜிபிடி போலவே இதை பயன்படுத்த முடியும் என தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் இது அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என தகவல்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    இ-ஆதார் செயலி விரைவில் அறிமுகம்: முகவரி, பெயரை எளிதாக திருத்தும் வசதி!

    September 19, 2025
    தொழில்நுட்பம்

    ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    September 18, 2025
    தொழில்நுட்பம்

    Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்

    September 14, 2025
    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    September 13, 2025
    தொழில்நுட்பம்

    ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    September 10, 2025
    தொழில்நுட்பம்

    கிளவுட் சேவைக்கான செலவுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் டேட்டா வவுச்சர்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    • புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    • பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு
    • ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்
    • சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.