Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு: சிஐஐ அறிக்கையில் தகவல்
    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு: சிஐஐ அறிக்கையில் தகவல்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு: சிஐஐ அறிக்கையில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது:

    செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரிக்கிறது. இந்திய தொழில்களில், வெகு விரைவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரிக்கவுள்ளது. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டருப்பதாக, நாட்டில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக 10-ல் 6 நிறுவனங்கள் (59 சதவீதம்) தெரிவித்துள்ளன. 38 சதவீத நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளன.

    ஏஐ நிர்வாகத்தை அமல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதால், 23 சதவீத நிறுவனங்கள் மட்டும் ஏஐ நெறிமுறைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை அமல்படுத்தியுள்ளன. ஏஐ தணிக்கை மற்றும் சார்பு மதீப்பீடுகளுக்கு 40 சதவீதத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்தப்போவதாக 51 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ பயன்பாட்டை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக 32 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘பிரிடிக்டிவ் ஏஐ, சாட்பாட்ஸ் மற்றும் மெஷின் லேனிங் போன்ற பல ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகளவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. ‘ஜெனரெட்டிவ் ஏஐ மற்றும் ஏஜென்டிக் ஏஐ போன்ற பிரபல தொழில்நுட்பங்களை விரைவில் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

    சுகாதாரத்தறை, நிதி சேவைகள், உற்பத்தி, போக்குவரத்து, தொலைதொடர்பு, விமான போக்குவரத்து உட்பட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, செயல்பாட்டு செயல்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டின் முதல் மூன்று வணிக நோக்கங்களாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    லாவா பிளேஸ் AMOLED 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 17, 2025
    தொழில்நுட்பம்

    போக்கோ M7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 15, 2025
    தொழில்நுட்பம்

    ‘9.6 kbps டூ 5ஜி யுகம் வரை’ – 30 ஆண்டுகளில் இந்தியா கண்ட இணைய புரட்சி!

    August 15, 2025
    தொழில்நுட்பம்

    விவோ V60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 12, 2025
    தொழில்நுட்பம்

    இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 9, 2025
    தொழில்நுட்பம்

    விவோ Y400 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு
    • 10 எல்லைகள் எப்போதும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமைக்கப்பட வேண்டும்
    • உ.பி.யில் மீன் வளர்ப்பால் அதிக பலன்: வாழையில் இருந்து மாறி முதலிடம் பெற்ற விவசாயி!
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இளைய பெரியவர்களில் வாய்வழி புற்றுநோய் உயரும்: காரணங்கள், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள், புகைபிடிக்காத புகையிலை அபாயங்கள் மற்றும் தடுப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.