Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»கோவையில் பெருகி வரும் உலகளாவிய திறன் மையங்கள்: இந்தியாவிலேயே 3-ம் இடம்!
    தொழில்நுட்பம்

    கோவையில் பெருகி வரும் உலகளாவிய திறன் மையங்கள்: இந்தியாவிலேயே 3-ம் இடம்!

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவையில் பெருகி வரும் உலகளாவிய திறன் மையங்கள்: இந்தியாவிலேயே 3-ம் இடம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: தொழில் நகரான கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில், இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா உலகளாவிய திறன் மையமாக (குளோபல் கெபாசிட்டி சென்டர்ஸ்-ஜி.சி.சி.) மாறி வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1,285 உலகளாவிய திறன் மையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது ஜி.சி.சி-க்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 19 லட்சம் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

    குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் எம்.எல்., டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் திறன்மிக்க பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய அளவில் 800-க்கும் மேற்பட்ட ஜி.சி.சி. மையங்களுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் 305 ஜி.சி.சி. மையங்கள் உள்ளன.

    சென்னைக்கு வெளியே கோவையில் 25 ஜி.சி.சி. மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் ஜி.சி.சி. மையங்கள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் கோவை 3-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது. அதேபோல 100-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவன ‘ஸ்டார்ட் அப்’-கள் கோவையில் செயல்பட்டு வருகின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களும் உள்ளனர்.

    இதுகுறித்து, கிரடாய் அமைப்பின் கோவை பிரிவு துணைத்தலைவர் அபிஷேக் கூறும்போது, “தொழில் நகரான கோவையில் கல்வி, மருத்துவம், ஜவுளித்தொழில் முக்கியத்துவம் பெற்றுவந்த நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் சுமார் 30 லட்சம் சதுர அடியில் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியா உலகளாவிய திறன் மையமாக விளங்கி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரான கோவையில் ஜி.சி.சி-க்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே 2-வது பெரிய சாஃப்ட்வேர் உற்பத்தி மையமாக கோவை உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிபிஓ மையங்களும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: பட்ஜெட் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 24, 2025
    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்சி F36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 22, 2025
    தொழில்நுட்பம்

    புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!

    July 20, 2025
    தொழில்நுட்பம்

    ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

    July 18, 2025
    தொழில்நுட்பம்

    Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

    July 17, 2025
    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
    • பள்ளி மாணவர்கள் கணினி, ஏஐ பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • இயற்கையாகவே கல்லீரலை குணப்படுத்த ஆயுர்வேத பழக்கம்
    • அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை
    • ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்ததில் 49 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.