சென்னை: ஒன்பிளஸ் Nord CE 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் உடன் ஒன்பிளஸ் Nord 5 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 அறிமுகமாகி உள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 5 போன் சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்ட் 4 அறிமுகமாகி இருந்தது.
நார்ட் 5 போன் சீரிஸில் இரண்டு போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதில் நார்ட் CE 5 போன் மீடியம் செக்மென்ட் விலையில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் விவோ, ஒப்போ, நத்திங் மற்றும் மோட்டோரோலா நிறுவன போன்களுக்கு சந்தையில் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் Nord CE 5 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 8350 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கம் உள்ள பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 7,100mAh பேட்டரி
- 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- வரும் 12-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது
- இதன் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது
- நார்ட் 5 போனின் விலை ரூ.31,999 முதல் தொடங்குகிறது