கோவை மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ துறையில் 1,592 நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் 37 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ‘ஸ்டார்ட் அப்’ துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையில் தமிழக அரசு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க திட்டமிட்டுள்ளது” என்றார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் பிரஜிந்திரா நவ்நீத், செயலாளர் கிருஷ்ணன், சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் (எஸ்டிபிஐ) இயக்குநர் மாதேஷா, புதுமை தொழில்நுட்ப குழுமத்தின் (ஐடிஎன்டி) முதன்மை செயல் அதிகாரி வனிதா, சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், கருத்தரங்கு தலைவர் முருகவேல், சிஐஐ தென்னிந்திய துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

