சென்னை: இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 15 5ஜி போனும் வெளிவந்துள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் சந்தையில் விற்பனை செய்கிறது. தற்போது ரியல்மி 15 சீரிஸ் வரிசையில் ரியல்மி 15 புரோ மற்றும் ரியல்மி 15 5ஜி போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 சிப்செட்
- 50 + 50 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி
- கேமரா
- 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்டுள்ளது இந்த போன்
- மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
- ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது
- 7,000 mAh பேட்டரி
- 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.31,999 முதல் ஆரம்பமாகிறது
- ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999 முதல் ஆரம்பமாகிறது