Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»“இதழியலுக்கு ஏஐ துணை புரியலாம், ஆனால்…” – பீட்டர் லிம்போர்க் கருத்து
    தொழில்நுட்பம்

    “இதழியலுக்கு ஏஐ துணை புரியலாம், ஆனால்…” – பீட்டர் லிம்போர்க் கருத்து

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இதழியலுக்கு ஏஐ துணை புரியலாம், ஆனால்…” – பீட்டர் லிம்போர்க் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து விவரித்தார்.

    அவர் தனது உரையில், “எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஊட்டுவதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசுகளிடம் சுமுக உறவு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை.

    சமூக வலைதளங்கள் இளைய தலைமுறையினரை அடைவதற்கான அற்புதமான வழியாக பரிணமித்திருப்பினும், அவையே தகவல், கருத்து திரிபுகளின் கருவிகளாகவும் இருக்கின்றன.

    “ஏஐ தொழில்நுட்பத்தை பரிசோதிக்க ஆரம்பித்தாலும் கூட, DW ஊடக நிறுனத்தின் உத்தியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது என நம்புகிறோம். சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு இருக்கும் அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக சவால்களுக்கு ஈடுகொடுக்க ஊடக அறத்தின் வழி நின்று செய்திகளை சேர்க்க நினைக்கும் உறுதியை தொடர வேண்டும்” என்றார் பீட்டர் லிம்போர்க்.

    இந்த நிகழ்வில், DW நிறுவனத்தின் ஆசிய நிகழ்ச்சிகளின் இயக்குநர் தேபராதி குஹா, அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் எஸ்.அருள்செல்வன், அண்ணா பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான மையத்தைச் சேர்ந்த முனைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    விவோ T4R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 1, 2025
    தொழில்நுட்பம்

    மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 31, 2025
    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 30, 2025
    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 28, 2025
    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 26, 2025
    தொழில்நுட்பம்

    iQOO Z10R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “மிகப்பெரிய அவமானம்” – ‘கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தேசிய விருது வழங்கியது குறித்து பினராயி விஜயன் சாடல்
    • “மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணை நிற்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு
    • தயிர் தினமும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதல்லவா? ஆயுர்வேதம் அதிக எண்ணிக்கையிலான அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு கி.மீ. நடந்து வந்து குடிநீர் எடுக்கிறோம்: எடப்பாடியிடம் புகார் தெரிவித்த கிராம பெண்கள் 
    • புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள்: புரோஸ்டேட் புற்றுநோயின் 6 ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.