Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»அறிவியல் மனப்பான்மை – 3 அடிப்படைக் காரணங்கள் | தேசிய அறிவியல் நாள்
    தொழில்நுட்பம்

    அறிவியல் மனப்பான்மை – 3 அடிப்படைக் காரணங்கள் | தேசிய அறிவியல் நாள்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அறிவியல் மனப்பான்மை – 3 அடிப்படைக் காரணங்கள் | தேசிய அறிவியல் நாள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 28 Feb, 2025 10:29 AM

    Published : 28 Feb 2025 10:29 AM
    Last Updated : 28 Feb 2025 10:29 AM

    அறிவியல் மனப்பான்மை – 3 அடிப்படைக் காரணங்கள் | தேசிய அறிவியல் நாள்

    இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் ஒன்று, ‘அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்ப்பது.’ அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரது தர்க்க – பகுத்தறிவு சார்ந்த மனப்பான்மை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நாம் தர்க்கரீதியாகவும் பகுத்தறிந்தும் அணுகுகிறோம் என்றால் நாம் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்று பொருள்.

    தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் அறிவியல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நம்மால் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியும். நம் கண் முன் நடப்பவை குறித்தும் நமக்குச் சொல்லப்படுபவை குறித்தும் அறிவியலின் துணையோடு பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுக்க முடியும். அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் செயல்பாடுகளையும் புறக்கணிக்க முடியும்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனது ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில்தான் ‘அறிவியல் மனப்பான்மை’ என்கிற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். ‘அறிவியல் மனப்பான்மை’ குறித்து பாம்பேயில் உள்ள நேரு மையம் சார்பாக அறிஞர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 1981இல் வெளியிடப்பட்டது. அது அறிவியல் மனப்பான்மையை ஏன் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று அடைப்படைக் காரணங்களைச் சொல்கிறது.

    1. நாம் அறிவைப் பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளை அறிவியல் மனப்பான்மையே தருகிறது.

    2. அறிவியல் முறைப்படி பெற்ற அறிவின் மூலமே மனித குலத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுத் தீர்வு காணமுடியும்.

    3. அன்றாட வாழ்க்கையில் மனிதனின் ஒவ்வொரு முயற்சிக்கும், பொது வாழ்க்கை நெறிமுறைகள் தொடங்கி அரசியல் – பொருளாதாரம் வரை அனைத்துக்கும் அறிவியல் மனப்பான்மையின் அடிப்படையிலான அணுகுமுறையே மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உதவும்.

    சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை பண்புதான் ‘அறிவியல் மனப்பான்மை.’

    பிப்.28 – இன்று தேசிய அறிவியல் நாள்

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    இ-ஆதார் செயலி விரைவில் அறிமுகம்: முகவரி, பெயரை எளிதாக திருத்தும் வசதி!

    September 19, 2025
    தொழில்நுட்பம்

    ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    September 18, 2025
    தொழில்நுட்பம்

    Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்

    September 14, 2025
    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    September 13, 2025
    தொழில்நுட்பம்

    ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    September 10, 2025
    தொழில்நுட்பம்

    கிளவுட் சேவைக்கான செலவுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் டேட்டா வவுச்சர்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    • ஷூ வடிவம் தோரணை மற்றும் வலியை எவ்வாறு பாதிக்கிறது: கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான பாதணிகளைத் தேர்வுசெய்ய ஒரு எளிய வழிகாட்டி – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து
    • மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
    • ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.